மேலும் அறிய

“மதுரையில் இயங்கும் நிறுவனத்தின் சாப்ட்வேர்களை சீனாவில் இருந்து கூட இயக்க முடியும்” - மென் பொறியாளர் சொன்ன திடுக் தகவல்

டக்கர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் உரிய பாதுகாப்பு இன்றி செயல்படுவதாகவும் அவர்களது சாப்ட்வேர்களை சீனாவில் இருந்து கூட இயக்கும் அளவிற்கு பாதுகாப்பற்றது எனவும் மென் பொறியாளர் குற்றச்சாட்டு.

TUCKERS மோட்டார்ஸ் நிறுவனத்தின் உண்மை தகவல்களை வெளியில் சொல்லி விடுவேன் என்பதற்காக தன் மீது தவறான பொய் புகார்களை அளித்துள்ளதாக கணினி பொறியாளர் புகார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இயங்கும் நிறுவனம்

மதுரை மாநகர் பழங்காநத்தம் நேருநகர் பகுதியில் மோகன்ராஜ் மற்றும் பிராகல்யா மோகன்ராஜ் என்ற தம்பதியினர் கடந்த  6 ஆண்டுகளாக TUCKER MOTORS PVT LTD என்ற இ - கார் மற்றும் இ- பைக் CHARGING ஸ்டேசன் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சார்ஜிங் ஸ்டேசன்கள் முழுவதும் சாப்ட்வேர் மூலமாக கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மோகன்ராஜ் பிராகல்யா தம்பதியினரின் நிறுவனத்தில் பணிபுரிந்த மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியைச் சேர்ந்த சிவா என்ற மென்பொருள் பொறியாளரை தங்களின் TUCKER MOTORS நிறுவனத்திற்கு சொந்தமான சாப்ட்வேர்கள் மற்றும் ஹார்டுவேர்களை திருடி சென்று விட்டதாக சில தினங்களுக்கு முன்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

மென் பொறியாளர் புகார்

இந்நிலையில், TUCKER மோட்டார் நிறுவனத்தில் பணிபுரிந்த கணினி மென்பொருள் பொறியாளாரான சிவா, டக்கர் மோட்டார் நிறுவன இயக்குநர்களான மோகன்ராஜ் மற்றும் பிராகல்யா தம்பதியினர் தன் மீது தவறான பொய்யான புகார் அளித்துள்ளதாக கூறி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

சீனா நிறுவனம் கூட இயக்கலாம்

இதனைத்தொடர்ந்து பேசிய சிவா, “டக்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பாகங்கள் அனைத்தும் உரிய பாதுகாப்பு இல்லாமலும் எளிதில் தீப்பற்ற கூடியதாகவும் இருப்பதால் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உருவாகுவதாக நான் அவர்களிடம் கூறியதன் காரணமாக நானாகவே நிறுவனத்தில் இருந்து பணியில் இருந்து வெளியேறினேன். மேலும் அந்த நிறுவனத்தில் கல்லூரிகளில் இருந்து அழைத்துவரக்கூடிய மாணாக்கர்களை பயிற்சி அளிப்பதாக கூறி உரிய பயிற்சி பெறாத மாணாக்கர்கள் மூலமாக சார்ஜிங் ஸ்டேஷனுக்கான பேட்டரிகளை பயன்படுத்துகிறார்கள். மேலும் அவர்கள் பயன்படுத்தக்கூடிய சாப்ட்வேர்கள் சாதாரணமாக சீனாவில் உள்ளவர்கள் கூட எளிதாக இயக்க கூடிய அளவிற்கு பாதுகாப்பற்றது. தான் நிறுவனத்தில் பணிபுரிந்து வெளியேறிய பின்பாக அவர்களுக்கு போட்டியாக தொழில் தொடங்கி விடுவேன் என்ற அச்சம் காரணமாக தன் மீது பொய்யான புகார் அளித்துள்ளனர். இதுபோன்று பொய்யான புகார் அளித்த நிலையில் தனது எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரிய நிறுவனத்தில் என்னை மட்டும் நம்பி எப்படி அனைத்து SOFTWARE மற்றும் ஹார்டுவேர்கள் கொடுக்க முடியும், அப்படி என்றால் பாஸ்வேர்டை அவர்களே மாற்றிக் கொள்ளலாம். ஆனால் தன் மீது பொய்யான குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர் எனவும் உடனடியாக பணிக்கு வராவிட்டால் கூலியாட்ககள் மூலமாக தூக்கி விடுவோம் என தனது அத்தையிடம் மோகன் ராஜன் மனைவி மிரட்டி பேசியதாகவும் தெரிவித்தார். என் மீது பொய்யான புகார் அளித்த மோகன்ராஜ் மற்றும் பிராகல்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன் எனவும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime: "கவலப்படாதீங்க நான் உங்களுக்கு ஏடிஎம்-ல் பணம் எடுத்துத்தறேன்" - ரூ.49 ஆயிரம் அபேஸ் !

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Embed widget