மேலும் அறிய
Advertisement
தமிழகத்திலேயே முன்மாதிரியாக கீழடி அருங்காட்சியகம் அமையும் - எம்.பி.சு.வெங்கடேசன்
டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மிகப்பெரிய உற்சாகத்தையும், மதுரைக்கும் தென் மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் ஒரு தலைமுறைக்கு பின் அறிவிக்கப்பட்ட பெரிய அறிவிப்பு.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாழ்வு முகாம் நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் பேசுகையில், "மதுரை மற்றும் தென்மாவட்டங்களின் கனவுத்திட்டம் டைடல் பார்க். 16 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கு பிறகு எந்தவிதமான தொழில் அறிவிப்பும் இல்லை. தற்போது 10 ஏக்கர் பரப்பளவில் 10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் 600 கோடி ரூபாயில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மிகப்பெரிய உற்சாகத்தையும், மதுரைக்கும் தென் மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் ஒரு தலைமுறைக்கு பின் அறிவிக்கப்பட்ட பெரிய அறிவிப்பு.
இது இளைஞர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நான் முதல்வரை சந்தித்து அளித்த 21 கோரிக்கைகளில் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மதுரை மத்திய சிறைச்சாலை இடமாற்றம், சிப்காட் அமைத்தல்,தொழில் நுட்ப பூங்கா அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.மதுரையின் அடிக்கட்டமைப்புகள் சாலை, குடிநீர், வடிகால் அமைப்புகளை சரி செய்ய விரைவில் நல்ல அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என நம்புகிறேன். கீழடி அருங்காட்சியக வேலையை ஒவ்வொரு முறை மதுரை வரும் போது முதல்வர் விசாரிக்கிறார். கீழடி அருங்காட்சியக வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலேயே முன்மாதிரியான அருங்காட்சியமாக கீழடி அருங்காட்சியகம் அமையும். விரைவாக கீழடி அருங்காட்சியகத்தை திறக்க ஏற்பாடு செய்யப்படும். முதல்வர் அதை திறந்து வைப்பார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - காலை உணவுத் திட்டம் அரசின் செலவோ, சலுகையோ, இலவசமோ அல்ல, இது அரசின் கடமை - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
கீழடி அகழாய்வு மிகுந்த உற்சாகத்தை தருகிறது. கீழடி அகழாய்வில் கிடைத்த தங்கத்திலான மணி மிகுந்த ஆச்சிரியத்தை தருகிறது. பத்தாண்டு கீழடி அகழாய்வு நடைபெறும் நிலையில், பத்தாண்டுக்கு பிறகும் புதிய புதிய பொருள் கிடைத்து கொண்டுள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது. பெரும் நாகரீகத்தின், பெரும் நகரத்தின் அமைவு கீழடி என சொன்னது சான்றுகளாய் கிடைத்து வருகிறது. தமிழ் நாகரீகத்தின் பழமையினுடைய மணிஓசை ஒவ்வொரு நாளும் அகழாய்வு வழியாக ஒலித்து கொண்டுள்ளது. நிச்சயமாக கீழடி அருங்காட்சியகம் முன்மாதிரி அருங்காட்சியகம் அமையும்” என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion