மேலும் அறிய

ஆதிச்சநல்லூரில் நிரந்தர அருங்காட்சியகம்? - மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

அருங்காட்சியகம் அமைப்பதற்கு தமிழக அரசு நிலம் வழங்கலாமே -  நீதிபதி கேள்வி நிலம் ஒதுக்கீடு செய்வது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்- நீதிபதி

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நிரந்தர அருங்காட்சியகம் அமைப்பது குறித்து ஒன்றிய அரசின் நிலைபாடு என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
தூத்துக்குடி ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நிரந்தர அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட கோரி வழக்கு.
 
தூத்துக்குடி சேர்ந்த காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 125.04 ஏக்கர் பரப்பளவில், பல கட்டங்களாக அகழாய்வு நடைபெற்றது. இங்கு கிடைக்கப்பட்ட  பொருட்கள் கிமு 1052 முதல் 665 ஆண்டுகள் வரை பழமையானது என கண்டறியப்பட்டது. தமிழர்களின் நாகரீகத்தை பறைசாற்றும் இந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அதே பகுதியில் நிரந்தரமான அருங்காட்சியும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகள் எழுந்த நிலையில், பி பிரிவில் ஆதிச்சநல்லூரில் தற்காலிக  அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. 2023  டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளத்தால் இந்த அருங்காட்சியகம் பாதிக்கப்பட்டது. அதனை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சி பிரிவில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் கிடப்பிலேயே உள்ளது. ஆகவே தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ள அகழாய்வு அருங்காட்சியகத்தை புனரமைத்து, சீரமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
பாதிப்பு இல்லை
 
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சி பிரிவில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. நிலம் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தமிழக அரசு நிலம் வழங்கினால் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். மேலும் தற்காலிக அருங்காட்சியகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
 
நீதிபதி உத்தவு
 
அப்போது நீதிபதிகள், ”ஐந்தயிரம் ஆண்டுகள் பழமையான, பண்டைய தமிழர்களின் நவீன நாகரிகத்தை பிரதிபலிக்கும் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி  நிரந்தரமான அருங்காட்சியகம் அமைப்பதற்கு  பொதுமக்களிடமிருந்து நிலம் கையாகப்படுத்துவது ஏன்?. அரசுக்கு சொந்தமான  ஏராளமான நிலங்கள் உள்ளது.  எனவே தமிழக அரசே அதே பகுதியில்  நிலங்கள் இருந்தால் வழங்கலாமே, என கேள்வி எழுப்பினார்கள். மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் நிலங்கள் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்.
 
வழக்கு ஒத்திவைப்பு
 
ஒன்றிய அரசு தரப்பில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மேலும் தொடர்வது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிரந்தரமான அருங்காட்சியகம் அமைப்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன மேலும் தற்காலிக அருங்காட்சியகம் சேதம் அடைந்திருந்தால் அதை புனரமைப்பது  குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூன் 27 க்கு ஒத்தி வைத்தனர்.
 
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka AasaiWheel Chair Cricket | சக்கர நாற்காலி கிரிக்கெட் தேசிய கோப்பை வென்ற தமிழகம் சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளிகள்Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
IPL 2025 CSK vs RR: செஞ்சு விட்ட ராணா! அடி வாங்கினாலும் அவுட்டாக்கிய அஸ்வின்!
IPL 2025 CSK vs RR: செஞ்சு விட்ட ராணா! அடி வாங்கினாலும் அவுட்டாக்கிய அஸ்வின்!
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
Embed widget