மேலும் அறிய

ஆதிச்சநல்லூரில் நிரந்தர அருங்காட்சியகம்? - மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

அருங்காட்சியகம் அமைப்பதற்கு தமிழக அரசு நிலம் வழங்கலாமே -  நீதிபதி கேள்வி நிலம் ஒதுக்கீடு செய்வது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்- நீதிபதி

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நிரந்தர அருங்காட்சியகம் அமைப்பது குறித்து ஒன்றிய அரசின் நிலைபாடு என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
தூத்துக்குடி ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நிரந்தர அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட கோரி வழக்கு.
 
தூத்துக்குடி சேர்ந்த காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 125.04 ஏக்கர் பரப்பளவில், பல கட்டங்களாக அகழாய்வு நடைபெற்றது. இங்கு கிடைக்கப்பட்ட  பொருட்கள் கிமு 1052 முதல் 665 ஆண்டுகள் வரை பழமையானது என கண்டறியப்பட்டது. தமிழர்களின் நாகரீகத்தை பறைசாற்றும் இந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அதே பகுதியில் நிரந்தரமான அருங்காட்சியும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகள் எழுந்த நிலையில், பி பிரிவில் ஆதிச்சநல்லூரில் தற்காலிக  அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. 2023  டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளத்தால் இந்த அருங்காட்சியகம் பாதிக்கப்பட்டது. அதனை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சி பிரிவில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் கிடப்பிலேயே உள்ளது. ஆகவே தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ள அகழாய்வு அருங்காட்சியகத்தை புனரமைத்து, சீரமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
பாதிப்பு இல்லை
 
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சி பிரிவில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. நிலம் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தமிழக அரசு நிலம் வழங்கினால் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். மேலும் தற்காலிக அருங்காட்சியகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
 
நீதிபதி உத்தவு
 
அப்போது நீதிபதிகள், ”ஐந்தயிரம் ஆண்டுகள் பழமையான, பண்டைய தமிழர்களின் நவீன நாகரிகத்தை பிரதிபலிக்கும் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி  நிரந்தரமான அருங்காட்சியகம் அமைப்பதற்கு  பொதுமக்களிடமிருந்து நிலம் கையாகப்படுத்துவது ஏன்?. அரசுக்கு சொந்தமான  ஏராளமான நிலங்கள் உள்ளது.  எனவே தமிழக அரசே அதே பகுதியில்  நிலங்கள் இருந்தால் வழங்கலாமே, என கேள்வி எழுப்பினார்கள். மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் நிலங்கள் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்.
 
வழக்கு ஒத்திவைப்பு
 
ஒன்றிய அரசு தரப்பில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மேலும் தொடர்வது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிரந்தரமான அருங்காட்சியகம் அமைப்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன மேலும் தற்காலிக அருங்காட்சியகம் சேதம் அடைந்திருந்தால் அதை புனரமைப்பது  குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூன் 27 க்கு ஒத்தி வைத்தனர்.
 
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget