![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
விருதுநகர் ஜவுளி பூங்கா குறித்து விழிப்புணர்வு பாத யாத்திரை நடத்த பாஜகவிற்கு அனுமதி - நீதிமன்றம்
பா.ஜ.க சார்பில் விருதுநகர் ஜவுளி பூங்கா குறித்து விழிப்புணர்வு பாதயாத்திரை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
![விருதுநகர் ஜவுளி பூங்கா குறித்து விழிப்புணர்வு பாத யாத்திரை நடத்த பாஜகவிற்கு அனுமதி - நீதிமன்றம் Madurai High Court has given permission to hold an awareness walk on behalf of the BJP விருதுநகர் ஜவுளி பூங்கா குறித்து விழிப்புணர்வு பாத யாத்திரை நடத்த பாஜகவிற்கு அனுமதி - நீதிமன்றம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/15/859e02221c67c8b7301f26027297eb6a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆகஸ்ட் 6 ஆம் தேதி பாஜக சார்பில் விருதுநகர் ஜவுளி பூங்கா குறித்து விழிப்புணர்வு பாதயாத்திரை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வலியுறுத்தி பாஜக பாத யாத்திரை நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், மாநில அரசு சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நிலத்தையும் ஒதுக்கீடு செய்யாமல் கிடப்பில் வைத்துள்ளனர். எனவே, இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவதற்காக பாஜக சார்பில் 1000 பேர் பாதயாத்திரை செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என சாந்தகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். பாதயாத்திரை நடத்த தனி நீதிபதி அனுமதி அளித்தார் இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், சிவகாசியில் இருந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 27 கிலோமீட்டர் குறுகிய பாதையை உள்ளது. இதனால் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பாதயாத்திரை செல்லும் பாதையில் பள்ளி, கல்லூரிகள் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், பாஜக சார்பாக பல பாதயாத்திரைகள் நடத்தப்பட்டுள்ளது எனவே பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது என தெரிவித்தனர்.
இதனையடுத்து நீதிபதிகள், ஆகஸ்ட் 6 ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை பாதயாத்திரை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். 300 நபர்கள் சிவகாசியில் இருந்து 2 கிலோமீட்டர் வரை பாதயாத்திரை ஆகவும், அதன் பின் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வாகனத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் 10 நபர்கள் மட்டும் சென்று மனு அளிக்க உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)