மேலும் அறிய

Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? என்று அமைச்சர் கோவி செழியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய கல்வி நிறுவனமும், இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் பல்கலைக்கழகமாகவும் திகழ்வது அண்ணா பல்கலைக்கழகம் ஆகும். தமிழ்நாட்டின் அடையாளமாக திகழும் இந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே, பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஞானசேகரன் உள்ளே வந்தது எப்படி?

இந்த சம்பவம் தொடர்பாக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி, ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று நிருபர்களைச் சந்தித்தார். 

அப்போது, அவர் பல்கலைக்கழகத்தில் உள்ள கேமராக்கள் 80 சதவீதம் வேலை செய்கின்றன. பல்கலைக்கழகத்தில் உள்ள கேமராக்கள் எங்கெங்கு வேலை செய்கிறது? எங்கெங்கு வேலை செய்யவில்லை என்று ஆய்வு செய்து வருகிறோம். 

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் ஏதும் இல்லை. ஞானசேகரனின் மனைவி அண்ணா பல்கலைக்கழக ஊழியர். அதனால் அவரை விட்டுச் செல்லவும், அவரை மீண்டும் அழைத்துச் செல்லவும் ஞானசேகரன் வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் பல்கலைக்கழகத்திற்குள் வந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். 

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் இணையத்தில் கசிந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தீவிர விசாரணை:

மாணவியின் எதிர்கால நலன், மாணவியின் கல்விக்கு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு தற்போது 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஞானசேகரனுக்கு 4 மனைவிகள் உள்ளனர். அதில் ஒரு மனைவியே அண்ணா பல்கலைக்கழக ஊழியர் ஆவார். இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும், ஜாமின் வழங்கவே கூடாது என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கவும், வெளியாட்கள் உள்ளே செல்வதைத் தவிர்க்கவும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்காெள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை மேலும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது ஏற்கனவே 15 வழக்குகள் உள்ள நிலையில், அவர் வேறு ஏதேனும் பல்கலைக்கழக மாணவியையோ அல்லது பெண்ணையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?
IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?
Embed widget