மேலும் அறிய
புதிய தலைமுறையினரை காக்க மதுரையில் போதை ஒழிப்பு மனித சங்கிலி!
போதை கலாச்சாரம் பழக்கத்தை ஒழிக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை அதை அரசுடன் கைகோர்த்து நாமம் முன்னெடுத்து சிறப்பாக செய்வோம் என்றார்.

போதைப் பொருள்
Source : whatsapp
போதையை ஒழிப்போம் ! புதிய தலைமுறையை காப்போம் ! விழிப்புணர்வால் வெற்றி பெறுவோம் ! -மதுரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து போதை ஒழிப்பை எடுத்துரைத்து மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு.
சமூகப் பணி
மதுரையை சேர்ந்த ஸ்டார் குரு சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனரும் சமூக செயல்பாட்டாளருமான ஸ்டார் குரு தனது டிரஸ்ட் மூலமாக வைகை ஆற்றை தூய்மைப்படுத்துதல், வைகை ஆற்றங்கரை சாலைகளில் சிசிடிவி கேமரா பொருத்துதல் என பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். குறிப்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயிலில் தினமும் நோயாளிகள் உறவினர்கள் ஆதரவற்றவர்கள் பொதுமக்கள் என ஆயிரம் நபர்களுக்கு மேலாக கடந்த இரண்டரை வருடங்களாக மதிய உணவு இலவசமாக வழங்கி வருகிறார்.
போதை ஒழிப்பு விழிப்புணர்வு
இந்நிலையில் அவர் தனது டிரஸ்ட் மூலமாக மதுரை பாரதி மருத்துவமனையோடு இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி கையெழுத்தியக்க நிகழ்வினை நடத்தினார். மனித சங்கிலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்று மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து ராஜாஜி பூங்கா சாலை வரை மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் என அனைவரும் தங்களது கைகளை ஒருவரோடு ஒருவர் கோர்த்து மனித சங்கிலியாக அணிவகுத்து நின்று போதை கலாச்சாரத்திற்கு எதிராக போதை ஒழிப்பை பறைசாற்றும் விதமாக மனித சங்கிலியாக நின்றனர்.
போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்
குறிப்பாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி பங்கேற்று மாணவர்கள் மத்தியில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள், போதை கலாச்சாரத்தை எவ்வாறு மாணவர்கள் கையாள வேண்டும் என எடுத்துரைத்து விழிப்புணர்வு செய்தார். இதுகுறித்து ஸ்டார்குரு சாரிட்டாள் பவுண்டேஷன் நிறுவனர் ஸ்டார் குரு பேசுகையில்...," போதை கலாச்சாரம் ஒரு தலைமுறையை சீரழித்து வருகிறது அதை தடுப்பதற்கான முயற்சியை அரசும் நாமும் முன்னெடுத்து வருகிறோம், இன்று இளைஞர்கள் பெரும்பாலானோர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அவர்கள் அதிலிருந்து வெளியே வர வேண்டும் எனவும் தமிழகத்தில் பரவி கிடக்கு போதை கலாச்சாரத்தில் இருந்து தமிழ்நாடு மீள வேண்டும் அடுத்து வரும் புதிய தலைமுறை இளைஞர்கள் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை நாம் இங்கு ஒன்றிணைத்து நமது அறக்கட்டளை மூலமாக போதை ஒழிப்பு மனித சங்கிலி கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு நடத்தியுள்ளோம். சென்னையில் முதலமைச்சர் அவர்கள் கூட போதை விழிப்புணர்வு மாரத்தான் நடத்தியது வரவேற்கத்தக்கது பாராட்டு கூறியது. போதை கலாச்சாரம் பழக்கத்தை ஒழிக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை அதை அரசுடன் கைகோர்த்து நாமம் முன்னெடுத்து சிறப்பாக செய்வோம் என்றார்.
Before You Go
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















