மேலும் அறிய

இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!

புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டதன் மூலம், அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மற்றும் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன.

விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவிலில் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உட்கட்டமைப்பு வசதிகளை  பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

புதிய உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

 விருதுநகர் மாவட்டம், சாத்தூர், அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயிலில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முடி காணிக்கை மண்டபம், அன்னதான மண்டபம், விருந்து மண்டபம், 235 கடைகள் உள்ளிட்ட பல்வேறு புதிய உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, அவர்கள் அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் குத்துவிளக்கேற்றி, புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்ததாவது..," தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், பழமையான திருக்கோயில்களின் ஆன்மிகப் பெருமையையும் பாதுகாத்து, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது

அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவில் தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது. இத்திருக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவிழா மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நவீன வசதிகளுடன் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம்

அதன் ஒரு பகுதியாக, பக்தர்கள் நேர்த்திக்கடனான முடி காணிக்கை செலுத்துவதற்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நவீன வசதிகளுடன் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபமும், திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட முறையில் சுகாதாரமான மற்றும் வசதியான முறையில் அன்னதானம் வழங்கும் வகையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அன்னதான மண்டபமும்,
திருக்கோயில் சார்ந்த நிகழ்வுகள், தனியார் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படும் வகையிலும் ரூ.8.44 கோடி மதிப்பீட்டில் விருந்து மண்டபமும், திருக்கோவில் வளாகத்தில் உள்ள வணிக நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படுவதுடன், பக்தர்களுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் எளிதாக வாங்கிக் கொள்ளும் பொருட்டு ரூ.12 கோடி மதிப்பீட்டில் 235 கடைகளும் என மொத்தம் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் புதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிய கட்டடங்கள் திறப்பு

இந்த புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டதன் மூலம், அருள்மிகு இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மற்றும் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. மேலும், திருக்கோவில் வளாகத்தின் பயன்பாட்டுத் திறன் மேம்படுவதுடன், பக்தர்களின் வருகையை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு தேவையான சேவைகளை ஒருங்கிணைந்த முறையில் வழங்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்வில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் திரு.ராமமூர்த்தி, செயல் அலுவலர் திரு.இளங்கோ, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், திருக்கோவில் நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
அண்ணன், தம்பிக்கு ராக்கி கட்ட முடியாதா? - கவலை வேண்டாம் போஸ்ட் ஆபிஸின் புதிய ஆஃபர்கள்.. இப்பவே புக் பண்ணுங்க
அண்ணன், தம்பிக்கு ராக்கி கட்ட முடியாதா? - கவலை வேண்டாம் போஸ்ட் ஆபிஸின் புதிய ஆஃபர்கள்.. இப்பவே புக் பண்ணுங்க
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget