மேலும் அறிய

அண்ணாநகரில் இளைஞர் மரணம்: காவல் விசாரணைக்கு பின் சடலம் மீட்பு! கொந்தளித்த மக்கள் - நடந்தது என்ன?

அண்ணாநகர் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் சென்ற பட்டியலின இளைஞர் உயிரிழந்த விவகாரம் - மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு.

தினேஷ்குமாரின் உடல் கால்வாயில் இருந்து சடலமாக மீட்பு

மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார்(30) என்ற இளைஞரை நேற்று அதிகாலை அண்ணாநகர் காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து நேற்று மதியம் தினேஷ்குமாரின் உடல் கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் தனது மகன் தினேஷ்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டி உயிரிழந்த தினேஷ் குமார் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேற்று மதியம் 3 மணி தொடங்கி  இரவு 9 மணி வரை அண்ண நகர் மற்றும் கே.கே நகர் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணாநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து காவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இந்நிலையில் ஆறு மணி நேர போராட்டம் காரணமாக மாநகர் முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது அண்ணாநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

தினேஷ் குமார் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால் தினேஷ்குமாரின் உடலை நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோ பதிவு ஆவணங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை பின்பற்றி உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும் என மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு தினேஷ் குமார் தரப்பினர் கடிதம். இதனிடையே தினேஷ்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இளைஞர் தினேஷ்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் இன்று மீண்டும் போராட்டம் நடைபெறும் என்பதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, அண்ணாநகர் பிரதான சாலை, மருத்துவமனை பிணவறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
Embed widget