மேலும் அறிய

திருவிழா கொண்டாடுவதே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் - நீதிமன்றம்

இன்னும் சில ஊர்களில் சிலர் சட்டை அணிந்து போக முடியவில்லை, தெருக்களில் நடந்து செல்ல முடியவில்லை, அதனை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதிகள் உத்தரவு

கரூர் மாவட்டத்தில்  சாமி கும்பிடுவதில் பட்டியலின  மக்களிடம் பாகுபாடு காட்டுவதாக தொடரப்பட்ட வழக்கு. அரசியலமைப்பின் பாதுகாவலர் நீதிமன்றமே - நீதிபதிகள்

மதுரைக் கிளையில் மனு
 
கரூரைச் சேர்ந்த சுப்ரமணி, "கரூர் மாவட்டம் பொருந்தலூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் திருவிழாவின்போது முளைப்பாரி தீச்சட்டி எடுத்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் செல்வதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் ஊருக்குள் உள்ள சாதிய பாகுபாடுகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என வழக்கு தாக்கல் செய்திருந்தார். கரூர் மாவட்டம் மண்மங்கலத்தைச் சேர்ந்த ரமேஷ், " கரூர் மாவட்டம், நெரூர் வடக்கு பகுதி ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோவில் திருவிழாவின்போது தேரை பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கும் கொண்டு செல்லவும், எவ்விதமான பாகுபாடும் இன்றி விழா நடத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
 
விசாரணை
 
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது. கரூர் மாவட்ட ஆட்சியர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் ஆஜர். அப்போது மத்திய மண்டல காவல் துறை தலைவர் ( ஐ.ஜி ) ஜோஷி நிர்மல்குமார்
கரூர் மாவட்ட ஆட்சியர் - தங்கவேல் கரூர் மாவட்ட காவல் எஸ். பி -  பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் நீதிபதி முன் ஆஜராகி இருந்தனர். அரசு தரப்பில், ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் அஜ்மல் கான் மற்றும் வீராக்கதிரவன்  "எந்த ஒரு சாதிய பாகுபாடும் இல்லை. வேறுபாடுகளைக் களையும் வகையிலேயே
காலணி என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசாணை உள்ளது. இரட்டை குவளை தொடர்பாக எந்த புகாரும் வழங்கப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டது.
 
மாறு வேடத்தில் ஆய்வு
 
அதற்கு நீதிபதிகள்..,"  சமூகத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். அரசின் கொள்கைகள் அனைத்தும் பேப்பர் வடிவில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் இல்லை. அரசியலமைப்பின் பாதுகாவலர் நீதிமன்றமே. ஒவ்வொருவரின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தில் இது போன்று வழக்குகள் தாக்கல் செய்யப்படுவது வேதனை அளிக்கிறது. யாராக இருந்தாலும் மரியாதை என்பது தானாக வர வேண்டும்" என தெரிவித்தனர். சுதந்திரம் அடைத்து 80 ஆண்டுகள் ஆன பின்னரும் இது போன்ற வழக்குகள் தாக்கலாவது வேதனை அளிக்கிறது. நீதிமன்றம் இது போன்ற வழக்குகளில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ஆனாலும் மீண்டும் மீண்டும் இது போன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என தெரிவித்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த கரூர் மாவட்ட ஆட்சியரிடம், "இவை தொடர்பாக புகார் பெறப்பட்டவுடன் தனிப்பட்ட முறையில் ஏன் விசாரணை செய்யவில்லை? மாறு வேடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்திருந்தால், உண்மையானக் பிரச்சினை தெரிந்திருக்கும். இன்னும் சில ஊர்களில் சட்டை அணிந்து போக முடியவில்லை, தெருக்களில் நடந்து செல்ல முடியவில்லை, அதனை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது ஏற்கத்தக்கதல்ல. மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிய வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமை" என தெரிவித்தனர்.
 
வழக்கை ஒத்திவைத்தனர்
 
தொடர்ந்து, கோயில் தேர் ஒரு தெருவிற்குள் போகும், மற்றொரு தெருவிற்குள் போகாது என்பது தான் பிரச்னைக்கு முக்கிய காரணம். திருவிழாவில் அனைவருக்கும் ஒரே முறை தான் கடைபிடிக்கப்பட வேண்டும். திருவிழா கொண்டாடுவதே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்  என்பதற்காகத்தான்" என குறிப்பிட்டனர். மேலும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண சாதிய ரீதியான வேறுபாடுகளை களைவதற்காக பாடுபடும் சமூக ஆர்வலர்களின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள் அரசு அலுவலர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய குழு அமைத்து இது போன்ற பிரச்னை இனியும் தொடராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். மேலும் இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
Madurai ; சீக்குவந்தே சாகனும் போல என மன வேதனையை வெளிப்படுத்தும் தூய்மை பணியாளர்கள் !
Madurai ; சீக்குவந்தே சாகனும் போல என மன வேதனையை வெளிப்படுத்தும் தூய்மை பணியாளர்கள் !
Madurai ; டாஸ்மாக் கடை இங்கு வேண்டாம்... கருப்புத்துணி கண்ணில் கட்டி களத்தில் இறங்கிய பொதுமக்கள் !
Madurai ; டாஸ்மாக் கடை இங்கு வேண்டாம்... கருப்புத்துணி கண்ணில் கட்டி களத்தில் இறங்கிய பொதுமக்கள் !
இளம் வயதினரிடையே குடல் அழற்சி நோய் பாதிப்புகள் அதிகரிப்பு.. மருத்துவர்கள் கொடுக்கும் விளக்கம் என்ன !
இளம் வயதினரிடையே குடல் அழற்சி நோய் பாதிப்புகள் அதிகரிப்பு.. மருத்துவர்கள் கொடுக்கும் விளக்கம் என்ன !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
Minister Keerthana : வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
DMK ADMK ED: லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
DMK Cong: ”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
Embed widget