மேலும் அறிய

அஜித்குமார் கொலை வழக்கு 9-வது நாளாக நீடிக்கும் சி.பி.ஐ., விசாரணை... அதிர்ச்சி தரும் ஆதாரங்கள் !

அஜித்குமார் கொலை வழக்கு 9 வது நாளாக நீடிக்கும் சிபிஐ விசாரணை - மதுரை சிபிஐ அலுவலகத்தில் 2 ஆவது முறையாக  விசாரணைக்காக ஆஜரான சாட்சியங்கள்.

மதுரை சி.பி.ஐ., அலுவலகத்தில் நடைபெறும் விசாரணையில் சாட்சியங்கள் அளிக்கும் தகவல்கள் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில்( CROSS CHECK ) தகவல் உறுதிப்படுத்தும் விசாரணையில் ஈடுபடும் சிபிஐ அதிகாரிகள்.

உயிரிழந்த மடப்புரம் அஜித்குமார்
 
சிவகங்கை மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் நகை காணாமல் போனது தொடர்பாக, திருப்புவனம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அஜித்குமாரை தாக்கி விசாரணை நடத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, தனிப்படை காவலர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த வழக்கானது மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்த போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிஐ சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
சிபிஐ விசாரணை
 
இதனையடுத்து சி.பி.ஐ., அதிகாரி டி.எஸ்.பி., மோகித் குமார் தலைமையிலான சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்குமாருடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சக ஊழியர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், உதவி ஆணையரின் ஓட்டுனர் கார்த்திக்வேல், பிரவின்குமார், வினோத்குமார் மற்றும் நவீன்குமார் ஆகிய 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிபிஐ சார்பில் சம்மன் அளிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை சிபிஐ அலுவலகத்தில் 5 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
 
ரீ- கிரியேசன் விசாரணை
 
இதன் தொடர்ச்சியாக 6ஆவது நாள் விசாரணையாக சனிக்கிழமையன்று திருப்புவனம் மற்றும் மடப்புரம் ஆகிய பகுதிகளில் விசாரணை நடைபெற்றது. காவலாளி அஜித்குமார் மற்றும் அவரது தம்பி நவின், ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார், அஜித்குமாரின் நண்பர்கள் பிரவீன்குமார், வினோத்குமார் ஆகியோரை  ஜூன் 27, 28 ஆம் தேதி  தனிப்படை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரீ- கிரியேசன் எனப்படும் சம்பவம் குறித்து விசாரணை ஆதாரங்களை சேகரிக்கும் விசாரணையை மேற்கொண்டனர்
 
CROSS CHECK  தகவல் சரிபார்ப்பு
 
இந்நிலையில் திருப்புவனம் காவல் நிலையத்தில் கடந்த 27ஆம் தேதி நிகிதா அளித்த புகார் தொடர்பாகவும் அஜித் குமாரை விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட போது, நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுரை சிபிஐ அலுவலகத்தில் 4 பேர் அளிக்கும் சாட்சியம் மற்றும் தகவல் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள் குறித்தும், ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் இரண்டு குழுக்களாக விசாரணை நடத்தினர். வழக்கு தொடர்பான தகவல்கள் மற்றும் விசாரணையை உறுதி செய்யும் CROSS CHECK  தகவல் சரிபார்ப்பு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
 

தலைப்பு செய்திகள்

மதுரை: இடி மின்னல் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு அமைச்சர் ரூ.4 லட்சம் நிவாரணம்!
மதுரை: இடி மின்னல் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு அமைச்சர் ரூ.4 லட்சம் நிவாரணம்!
கொடைக்கானல் சுற்றுலா மேம்பட ரோப்வே: சென்னை மெட்ரோ ஆய்வு!
கொடைக்கானல் சுற்றுலா மேம்பட ரோப்வே: சென்னை மெட்ரோ ஆய்வு!
திண்டுக்கல் காந்தி கிராமத்தில் ரூ.75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்!
திண்டுக்கல் காந்தி கிராமத்தில் ரூ.75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்!
மதுரையில் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள்: தள்ளுமுள்ளு, மக்கள் ஏமாற்றம்!
மதுரையில் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள்: தள்ளுமுள்ளு, மக்கள் ஏமாற்றம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
SENTHIL BALAJI vs TVK : கைதா.? ஜாமீனா.? செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
கைதா.? ஜாமீனா.? செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
TNEB Employees Allowance: மின் வாரிய ஊழியர்களுக்கு குஷி.! ரூ.10,000 அள்ளிக்கொடுக்கும் அரசு-வெளியான முக்கிய அறிவிப்பு
மின் வாரிய ஊழியர்களுக்கு குஷி.! ரூ.10,000 அள்ளிக்கொடுக்கும் அரசு-வெளியான முக்கிய அறிவிப்பு
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Embed widget