மேலும் அறிய

எய்ம்ஸ் கட்டடப் பணி முடிவதற்கு முன் இதையெல்லாம் செஞ்சு முடிக்கணும்.. கடிதத்தில் இருப்பது என்ன?

மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம்.

எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிவதற்கு முன்னதாக கப்பலூர், செக்கானூரணி ரயில் நிலையங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பி உதயகுமார், தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி

மதுரை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரை தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தென்னிந்தியாவில், திருமங்கலம் உச்சபட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த கப்பலூர் ரயில் நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனையும், 19,500 குடியிருப்பு கொண்ட துணைக்கோள் நகரமும் அமைக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய சிட்கோ தொழில்பேட்டையும் திருமங்கலம் கப்பலூரில் செயல்பட்டு வருகிறது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்து வருகிறார்கள்.
 

கப்பலூர் ரயில் நிலையம், செக்கானூரணி ரயில் நிலையம்

ஆகவே பொதுமக்களின் வசதிக்காகவும், மேற்கண்ட வளர்ச்சி திட்டங்களின் அடிப்படையில் கப்பலூர் ரயில் நிலையத்தை மீண்டும் அமைத்திடவும், இதே போல் மதுரை- தேனி மார்க்கத்தில் அகல ரயில் பாதை அமைத்திட்டபோது மூடப்பட்ட செக்கானூரணியில் நிலையத்தில் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து திருமங்கலம் அதனை சுற்றியுள்ள மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து செல்ல வசதியாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருக்கும் கப்பலூர் ரயில் நிலையம், செக்கானூரணி ரயில் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம்

  
ஆகவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருபவர்களின் நலனை கருத்தில் கொண்டு எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிவதற்கு முன்னதாக கப்பலூர் ரயில் நிலையம் செக்கானூரணி ரயில் நிலையங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகத்தை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
 
 
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? - திருமாவளவன் சொல்வது என்ன?
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
Embed widget