மேலும் அறிய
எனக்கும் மன வருத்தம் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் என்னை நல்லபடியாக வைத்துள்ளார்.. செல்லூர் ராஜூ சொல்வது என்ன?
எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லக்கூடிய வரை நாம் பாராட்டி தான் ஆக வேண்டும். - செல்லூர் ராஜூ பேட்டி.

செல்லூர் ராஜூ
எனக்கும் மன வருத்தம் இருக்கத்தான் செய்கிறது - என்னை அவர் நல்ல முறையில் தான் பார்த்துக் கொள்கிறார். கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய ஈ.பி.எஸ்.ஐ நாம் பாராட்ட வேண்டும். - மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படவுள்ள புதிய அங்கன்வாடி மையத்திற்கான பூமி பூஜையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்...," அ.தி.மு.க., ஆட்சி காலகட்டத்தில் மிகச்சிறந்த ஒரு மாநகராட்சியாக திகழ்ந்த மதுரை மாநகராட்சி உடைய நிலை தற்போது என்னவென்று உங்களுக்கு தெரியும். உலகப் பிரசித்தி பெற்ற அருள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தீ விபத்து நடந்த வீர வசுந்தராயர் மண்டபத்திற்கு கற்கள் எடுக்கும் பணி அதிமுக ஆட்சி கால கட்டடத்தில் நடந்தது. ஆனால் அதை முழுமை பெறாமல் குடமுழுக்கு நடத்தக்கூடாது என்பது ஆன்மீக அன்பர்களின் கருத்து. மக்கள் வரிப்பணத்தின் மீது மோசடி கட்டடங்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளில் இயல்பு உள்ளிட்ட 200 கோடி ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் ராஜினாமா கைது உள்ளிட்டவர்கள் நடைபெற்றது, மதுரை மாநகராட்சியில் தான்.
நல்லது நடந்தால் சரிதான்
17 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மாடக்குளம் பகுதியில் கரைகளை பலப்படுத்தக்கூடிய பணிகள் நடைபெற்று வரக்கூடிய வேளையில், கரைகள் பலவீனம் இன்றி உடைப்பு ஏற்பட்டது. களத்திற்கு நான் சென்றது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தது. அதற்குப் பிறகு பல நாட்கள் கழித்து அமைச்சர் மூர்த்தி அங்கே சென்றார். அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது அந்த பகுதியில் அவர் தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். எது எப்படியோ எங்களுக்கு பகுதி மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்.
எனக்கு எந்த மன வருத்தமும் கிடையாது
எங்களைப் பொறுத்தவரை திமுக தான் எதிரி. எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த ஒரு நிலத்தகராரும் கிடையாது. மக்கள் விரோத ஆட்சியாக இருக்கக்கூடிய திமுகவை வீட்டுக்கு அனுப்புவது தான் எங்களது எண்ணம். இந்த நிலையில் தான் இபிஎஸ் செங்கோட்டையனை நீக்கி இருக்கிறார். தலைமை சொல்வதற்கு யாராக இருந்தாலும் கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும். எனக்கும் கூடத்தான் மன வருத்தம் இருக்கு. யாருக்கு மன வருத்தம் இருந்தாலும் அதை பொதுச் செயலாளரை பார்த்து தான் சொல்ல வேண்டும். அதை விடுத்துவிட்டு ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கக் கூடாது. பொதுச் செயலாளர் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு நாங்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்கத்தான் செய்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒரு மன வருத்தம் என்றால் அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது. எனக்கு எந்த மன வருத்தமும் கிடையாது, என்னை நன்றாகத் தான் வைத்திருக்கிறார்.
கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித்தின் கருத்து குறித்த கேள்விக்கு ?
நடிகர் அஜித் இவ்வளவு நாட்கள் கழித்து ஏன் சொன்னார். எதற்கு சொன்னார் என்று தெரியவில்லை. ஒருவேளை மீண்டும் படப்பிடிப்பிற்கு அவர் செல்கிறாரா? என்று தெரியவில்லை இவ்வளவு நாட்களாக மௌனம் சாதித்து விட்டு தற்போது ஏன் சொல்லுகிறார். தன்னை நோக்கி வரக்கூடிய அனைத்து பந்துகளையும் சிக்ஸர் அடிக்கிறார், எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லக்கூடிய வரை நாம் பாராட்டி தான் ஆக வேண்டும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















