மேலும் அறிய

கொலை செய்ய வந்தாங்க... மதுரை ஆதீனம் சர்ச்சை பேட்டியை தொடர்ந்து 4 பிரிவில் வழக்குப் பதிவு !

கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒருவரை தூண்டுதல், வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஏற்படுத்து உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஆதீனம் மீது, வழக்குப் பதிவு.

பாரம்பரியம் மிக்க மதுரை ஆதீன மடத்திற்கு கீழ் செயல்படும் முக்கிய நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை 293-வது ஆதீனம் மீது வழக்குப் பதிவு
 
மதுரை 292-வது ஆதீனம் மறைவிற்கு பின் பல ஆண்டு பாரம்பரியம் மிக்க மதுரை ஆதீன மடத்தில், ஹரி ஹர ஞானசம்பந்தர் தேசிக்காச்சாரியார் கடந்த 2021-ஆம் ஆண்டு 293-வது ஆதீனமாக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றது முதல் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். அரசியல் மற்றும் சினிமா தொடர்பாக கருத்துகளை கூறி ஏடாகூடமாக இணையத்தில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார். இந்த சூழலில் தற்போது மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையில் ஏற்பட்ட கார் விபத்து சர்ச்சை
 
 சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, மதுரை ஆதீனம் சொகுசு காரில் மே-2ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது, மற்றொரு கார் மோதி சிறிய விபத்து ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தன்னை சிலர் கொலை செய்ய முற்பட்டதாக கூறி மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதில் குறிப்பாக "குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள்" தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக கூறியிருந்தார். அவருடன், அவரது ஓட்டுநரும் அது குறித்து பேட்டி அளித்திருந்தார். இந்த கருத்து இரு மதத்தினர் இடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியது.
 
காவல்துறை வெளியிட்ட கார் விபத்து குறித்த சிசிடிவி வீடியோ
 
இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்த, சி.சி.டி.வி., காட்சியை காவல்துறை தரப்பில்  வெளியிடப்பட்டது. மேலும் தவறான தகவல்களை மதுரை ஆதீனம் தரப்பினர் வெளியிடுவதாக கூறி அறிக்கை வெளியிடப்பட்டது. இதனையடுத்து உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட வாகன விபத்து குறித்து. தவறான தகவல்களை பரப்பி. மதமோதலை தூண்டும் வகையில் பேசிய, மதுரை ஆதீனத்தின் மீது, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கக் கோரி பல இடங்களில் புகார்மனு அளிக்கப்பட்டது. 
 
சென்னை சைபர் கிரைம் வழக்கு
 
குறிப்பாக சென்னை எழுப்பூர் அருகே, உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் கடந்த 24ஆம் தேதி சென்னை காவல் ஆணையருக்கு புகார் ஒன்றை அனுப்பினார். அதில்..,” மதுரை ஆதீனத்துக்கு நடந்த சாலை விபத்து தொடர்பாக, மாநாட்டிலும் பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் மற்றும் சமூக ஊடகங்களிலும் அவரை வாகன விபத்து மூலம் கொலை செய்ய சதி வேலை நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார். கொலை செய்ய வந்தவர்கள், மத அடையாளத்தில் இருந்தது போன்றும் சொல்லியிருந்தார். இது சிறுபான்மையினர் குறித்து தவறான கருத்துக்களை பரப்பும் வகையில் இருந்தது. எனவே மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் போலீசார். மதுரை ஆதீனத்தின் மீது, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒருவரை தூண்டுதல், வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பாரம்பரியம் மிக்க மதுரை ஆதீன மடத்திற்கு கீழ் செயல்படும் முக்கிய நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பழனி முருகன்: 75 லட்சம் வைரவேலுடன் பறவை காவடி! வால்பாறை பக்தர்களின் பொன்விழா ஆச்சரியம்!
பழனி முருகன்: 75 லட்சம் வைரவேலுடன் பறவை காவடி! வால்பாறை பக்தர்களின் பொன்விழா ஆச்சரியம்!
விருதுநகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சாதனையாளர்களுக்கு 'பசுமை சாம்பியன்' விருதுகள்: ரூ.1 லட்சம் பரிசு!
விருதுநகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சாதனையாளர்களுக்கு 'பசுமை சாம்பியன்' விருதுகள்: ரூ.1 லட்சம் பரிசு!
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? இதோ உங்களுக்கா சூப்பர் டிப்ஸ் இருக்கு பாருங்க !
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? இதோ உங்களுக்கா சூப்பர் டிப்ஸ் இருக்கு பாருங்க !
Madurai Hc ; மானாமதுரை ஆகாஷ் மரணம்: கொலை வழக்காக மாற்றம்... போராட்டம் முடிவுக்கு வந்தது, நீதிபதி அதிரடி உத்தரவு!
Madurai Hc ; மானாமதுரை ஆகாஷ் மரணம்: கொலை வழக்காக மாற்றம்... போராட்டம் முடிவுக்கு வந்தது, நீதிபதி அதிரடி உத்தரவு!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Embed widget