மேலும் அறிய

கணவர் உயிரிழந்தாலும் பெண்ணுக்கு வீட்டில் உரிமை உண்டு - கேரள நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2022ஆம் ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி கேரள உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.

ஒரு பெண் புகுந்த வீட்டில் வசிக்கும்போது எதிர்பாராத விதமாக கணவர் இறந்துவிட்டால், பெண்ணுக்குப் புகுந்த வீட்டில் வாழ உரிமை உண்டு என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கணவர் உயிரிழந்தாலும் அந்த பெண்ணை கணவர்  வீட்டில் இருந்து யாரும் வெளியேற்ற முடியாது என்பதையும் கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.


கணவர் உயிரிழந்தாலும் பெண்ணுக்கு வீட்டில் உரிமை உண்டு - கேரள நீதிமன்றம் தீர்ப்பு

கேரள மாநிலத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தனது கணவர் உயிரிழந்த பிறகு, மாமனார், மாமியார் வீட்டில் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பு கோரி வழக்கு தொடுத்திருந்தார்.  2009ஆம் ஆண்டு கணவர் இறந்த பிறகு, அதே வீட்டில் இருந்து உறவினர்கள் தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயல்வதாக அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதுவே வழக்கின் புகார் மனு. முதலில் இந்த வழக்கை விசாரித்த பாலக்காடு  நீதிமன்றம் ஏற்கனவே இந்த பெண்ணுக்குப் பாதுகாப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதை எதிர்த்து மனுதாரரின் கணவரின் உறவினர் மேல்முறையீடு செய்தார். கேரள உயர் நீதிபதி எம்.பி.சினேகலதா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில்,  நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். மேலும் அந்த உறவினர்களின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் , அந்தப் பெண் தனது மனுவில், கணவர் இறந்த பிறகு, மாமியார் மற்றும் மாமனார் இணைந்து தன்னை துன்புறுத்தியதாகவும்,  வீட்டிற்குள் நுழைய விடாமல் இருந்ததாக புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.


கணவர் உயிரிழந்தாலும் பெண்ணுக்கு வீட்டில் உரிமை உண்டு - கேரள நீதிமன்றம் தீர்ப்பு

இதையடுத்து 2005ஆம் ஆண்டு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 12ன் கீழ் நீதிமன்றத்தில் அந்த பெண் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கணவர் இறந்ததால் அந்தப் பெண்ணுக்கும் மாமியாரும் எந்தவொரு உறவும் இல்லை எனச் சொல்லி பெண்ணுக்கு எந்தவொரு நிவாரணம் வழங்க முடியாது என மறுத்துவிட்டது. ஆனால், இதை எதிர்த்து அந்த பெண் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அங்குத் தீர்ப்பு மாற்றி வந்தது.

அந்தப் பெண்ணுக்குச் சொந்தமாகச் சொத்து இருப்பதாகவும், அவர் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாகவும் கூறிய உறவினர்கள், இதனால் அந்த பெண் பாதிக்கப்பட்ட நபர் எனக் கூறி முறையிட்டனர். இருப்பினும், வாதங்களை நிராகரித்த உயர் நீதிமன்றம், அந்தப் பெண் இறந்தவரின் மனைவி என்றும் அவர் அந்த வீட்டில் வசித்து வந்தவர் என்பதையும் குறிப்பிட்டனர். இதனால் இந்த வழக்கில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பொருந்தும் என்று கூறினர். மேலும், அந்த வீட்டில் வசிப்பதற்கான உரிமை அந்த பெண்ணுக்கு இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.


கணவர் உயிரிழந்தாலும் பெண்ணுக்கு வீட்டில் உரிமை உண்டு - கேரள நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2022ஆம் ஆண்டு  ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி கேரள உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. மேலும் நீதிபதிகள், ஒரு பெண்ணின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கு இந்த உரிமை மிகவும் முக்கியமானது. குடும்ப வன்முறையினால் அவர் வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து வெளியேற்றப்படாமல் இருப்பதே இந்த  தீர்ப்பு என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget