மேலும் அறிய

"அண்ணன் ஜெயக்குமார் கூறுவது உண்மை அல்ல" - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்

அமைச்சராக யார் இருக்க வேண்டும்யார் இருக்கக் கூடாது, யாருக்கு எந்த இலாக்கா தர வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம், உரிமை முதல்வருக்கு மட்டுமே உண்டு.

தமிழக உறுதிமொழி ஏற்பு குழு தலைவரும் வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏவுமான வேல்முருகன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்.

தமிழகத்தில் 500 மதுபான கடைகளை மூடுவது பற்றி வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்த கேள்விக்கு:

இது குறித்து தொடர்ந்து சட்டமன்றத்திலும் முதல்வரிடம் வலியுறுத்தினேன். இப்போது தமிழக முதல்வர் அவர்கள் 500 மதுபான கடைகளை முடுவதாக அறிவித்து அதற்கான கடைகளை கணக்கெடுத்து நாளையிலிருந்து(இன்று) கடைகளை மூட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது ஒரு முன்மாதிரியான முயற்சி வரவேற்புகான, பாராட்டுகான முயற்சி. படிப்படியாக அனைத்து கடைகளும் மூட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோளையும் வைக்கிறேன்.


டாஸ்மாக் கடை மூடுவது செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு

இது முற்றிலுமாக தவறான கருத்து. நான் சட்டமன்றத்தில் பேசும் போதும். ஏனைய பிரதான எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையும், உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஆட்சிப் பொறுப்பு வந்ததிலிருந்து படிப்படியாக 500 கடைகள் முட நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதனால் செந்தில் பாலாஜி கைதிற்கும் எள் அளவும், எள்  முனையளவும் தொடர்பில்லை.

நான் தான் அரசின் உறுதிமொழி குழு இயற்பின் தலைவர் முதல்வர் சட்டமன்றத்திலேயே அறிவித்தார். மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சரும் சட்டமன்றத்திலேயே அறிவித்திருக்கிறார் சட்டமன்றத்தில் குறிப்புகள் இருக்கின்றன. எனக்கு உண்மை தெரியும். முன்னாள் அமைச்சர், அண்ணன் ஜெயக்குமார் கூறுவது உண்மை அல்ல


இலாகா இல்லாத அமைச்சராக தொடர கூடாது என எதிர்கட்சிகள் கூறுவது குறித்த கேள்விக்கு:

அவர்கள் அரசியல் செய்வதற்காக போராடுகிறார்கள். இது போன்ற நேரங்களில் பல்வேறு மாநிலங்களில் 3 தருணங்கள் இருக்கின்றது. அந்த முன்னுதாரணத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கடைபிடிக்கிறார். அமைச்சராக யார் இருக்க வேண்டும்யார் இருக்கக் கூடாது, யாருக்கு எந்த இலாக்கா தர வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம், உரிமை முதல்வருக்கு மட்டுமே உண்டு. அதனையே இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது, அதனையே முதலமைச்சர் அவர்கள் செய்கிறார்கள் இலக்கில்லாத அமைச்சராக இருக்க வேண்டுமா அல்லது உடல்நிலை தேறிய பின் அமைச்சரவை பொறுப்பு வழங்கப்படுமா என்பதை முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட அதிகாரம்.


அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்ந்து முதல்வரும் கைது செய்யப்படுவார் என அண்ணாமலை கூறியது பற்றிய கேள்விக்கு:

முதலமைச்சர் மீது எந்த  குற்றச்சாட்டுகளோ, எந்த வழக்குகளும் இல்லை. செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியில் 2015ல் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக இன்றைக்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. தற்பொழுது உச்ச நீதிமன்றம் கூட சில அறிவுரைகளை வழங்கி உயர்நீதிமன்றத்திற்கு வழிகாட்டுகிறது. ஆகவே நீதிமன்றம் இந்த வழக்கை கவனித்துக் கொண்டிருக்கிறது. அமைச்சராக இருந்தாலும் முதல்வராக இருந்தாலும் உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டும்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget