மேலும் அறிய

வாடகைக் கட்டடம் டூ சொந்த அடைக்கலம்: மதுரையில் இலவச முதியோர் இல்லம்

அடுத்த கட்டமாக படுக்கையில் நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கு தேவையான கட்டிடமானது உருவாக உள்ளது. இதனை விரைந்து செய்ய உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

கொரோனாவில் ஆரம்பித்த அடைக்கலம் ஆலமரமாக மாறிவிட்டது 
 
மதுரையில் திருநகர் பக்கம் என்ற அமைப்பு  சேர்ந்து பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றனர். கடந்த 12 வருடமாக மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் மரக்கன்றுகள் நடுவது முதல் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்குவது வரை பல்வேறு அறம் சார்ந்த பணிகளை இந்த இளைஞர் அமைப்பு செய்து வருகின்றனர். ஊர்வனம், திருநகர் பக்கம், அடைக்கலம் என பல இயக்கங்களாகப் பிரிந்து தேவையான இடத்தில், தேவையான உதவிகளை செய்கின்றனர். மதுரை மாவட்டத்தின் வளர்ச்சியை  சார்ந்தும், இயற்கை சூழல் சார்ந்தும் பல விடயங்களை முன் நின்று செய்து வருகின்றனர்.
 
 
சமூக ஆர்வலர் பலரும் பாராட்டு
 
இந்நிலையில் திருநகர் பக்கம் அமைப்பு அடைக்கலம் என்ற  பெயரில் இலவச முதியோர் இல்லத்தை நடத்தி வந்த சூழ்நிலையில், வாடகையை கட்டிடத்தில் இருந்து தற்போது சொந்த கட்டிடமாக மாற்றி அமைத்துள்ளனர். கிட்டத்தட்ட 92 லட்சம் ரூபாய்க்கு இடம், கட்டிடம் என சகல வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லத்தை பலரின் உதவியோடும் வங்கியில் கடன் வாங்கியும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதனால் இவர்களை மதுரை மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பலரும் பாராட்டிய வருகின்றனர்.
 
வாடகைக் கட்டடம் முதல் சொந்த அடைக்கலகம்
 
இது குறித்து சமூக ஆர்வலர் விஸ்வா கூறுகையில்...,” இந்த அடைக்கலம் முதியோர் இல்லம் கொரோனா காலகட்டத்தில் சேவையாக தொடங்கியது. சாலை ஓரம் ஆதரவற்ற முதியவர்களுக்கு மருந்து கொடுப்பது, உணவு கொடுப்பது, போர்வை, சால்வை என்று பல உதவிகள் செய்தோம். ஆதரவற்ற அவர்களை ஒரு வீட்டில் தங்க வைக்க வேண்டும் என வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்தோம். தொடர்ந்து பல இடங்களில் ஒருவரிடம், இரண்டு வருடம் என வாடகைக்கு இருந்த சூழ்நிலையில் தற்போது சொந்தமாக இடம் வாங்கி கட்டடம் கட்டி அடைக்கலம் முதியோர் இல்லமாக அமைத்துள்ளோம்.  கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இந்த கட்டத்தை நீதி அரசர் ஜி.ஆர்.சாமிநாதன் திறந்து வைத்தார். இந்த அடைக்கலம் முதியோர் இல்லம் பலருக்கு உபயோகமாக இருக்கிறது. தற்போது 25 நபர்கள் இருக்கும்படியாக இந்த இடம் இருக்கிறது. இதற்கு பலரும் உதவியாக இருந்துள்ளனர்.
 
அடுத்த கட்டத்திற்கு நகரும் அடைக்கலம்
 
தனியார் பள்ளி தனியார் மருத்துவமனை சமூக அலுவலர் என எக்கச்சக்க நபர்கள் இதற்கு உதவியை செய்துள்ளனர். அவர்களால் தான் இது சாத்தியமாகியுள்ளது. வங்கிப் பணம், கையில் இருந்த பணம், உதவி கிடைத்தது பணம் என பலவற்றின் சேர்த்து இதை உருவாக்கியுள்ளோம். தரைதளம் மட்டும் தற்போது உருவாக்கப்பட்டு ஒரு ஹால், பாத்ரூம் என போதி வசதியுடன் அடைக்கலம் உருவாக்கினோம். அடுத்த கட்டமாக படுக்கையில் நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கு தேவையான கட்டிடமானது உருவாக உள்ளது. இதனை விரைந்து செய்ய உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?
மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
16வது நாளில் நடந்த சோகம் - சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
16வது நாளில் நடந்த சோகம் - சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?
மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
16வது நாளில் நடந்த சோகம் - சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
16வது நாளில் நடந்த சோகம் - சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
Gold Rate: இதுதான் புதிய உச்சம்..! ரூ.58 ஆயிரத்தை கடந்த ஆபரண தங்கம் விலை - ஒரு கிராம் இவ்வளவா?
Gold Rate: இதுதான் புதிய உச்சம்..! ரூ.58 ஆயிரத்தை கடந்த ஆபரண தங்கம் விலை - ஒரு கிராம் இவ்வளவா?
Kandha Shasti Festival: அரோகரா! முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி திருவிழா எப்போது? ஏன் இந்த கொண்டாட்டம்?
அரோகரா! முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி திருவிழா எப்போது? ஏன் இந்த கொண்டாட்டம்?
Diwali Bonus : அரசு ஊழியர்களுக்கு  தீபாவளி போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. குஷியில் ஊழியர்கள்..
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. குஷியில் ஊழியர்கள்..
CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
Embed widget