மேலும் அறிய

சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!

சென்னைக்கு இன்று மழை குறைந்துள்ள நிலையில் ரெட் அலர்ட் ஏன் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.

ரெட் அலர்ட்

இன்றைக்கு, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் சில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மக்களும் முன்னெச்சரிக்கையாக உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்தனர். 

ஏன் அதிகனமழை இல்லை:

ஆனால், எதிர்பார்த்த அதிகனமழை பெய்யவில்லை, மாறாக சில நேரங்களில் மிதமான மழை பெய்கிறது, சில நேரங்களில் வெயில் கூட அடித்தது. 

இந்நிலையில், இதுகுறித்து தனியார் வானிலை நிபுணர் தெரிவிக்கையில், “ கனமழையை கொடுக்க கூடிய மேககூட்டங்கள் மேல்நோக்கியும், தெற்கு ஆந்திராவை நோக்கியும் சென்றுவிட்டன. இதன் காரணமாக  ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யவில்லை. 

வானிலை மைய இயக்குநர் பிற்பகல் அப்டேட்:

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது குறித்தும், வானிலை நிலவரம் குறித்தும் வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது “ காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பது குறித்து இப்போது கணிக்க முடியாது . 

மேலும், சென்னையில் நேற்று இரவு மழை மேகங்கள் உருவாகுவதற்கான சூழல் இல்லாத காரணத்தால் மழை மேகங்கள் உருவாகவில்லை. இதே சூழ்நிலைதான் இன்று காலையும் இருந்தது. இதனால், அதிகனமழை தரக்கூடிய மழைமேகங்கள்  உருவாகவில்லை, இதனால் இன்று அதிகனமழை பெய்யவில்லை.

ஏற்கனவே பெய்த மழை அளவு, காற்றின் வேகத்தை பொறுத்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் சூழலால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கரையை இன்னும் கடக்காத காரணத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.



சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே? 

வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கடந்த 6 மணி நேரத்தில் 15 கி.மீ வேகத்தில்  நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 280 கி.மீ கிழக்கு – தென்கிழக்கிலும், புதுச்சேரிக்கு 320 கி.மீ கிழக்கு வடக்கிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நிலை கொண்டுள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வட மேற்கு நோக்கி நகர்ந்து வடதமிழ்நாடு தெற்கு ஆந்திர கடற்கரையோரம் மற்றும் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே நாளை (அக்டோபர். 17) காலை கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இந்நிலையில், நாளை காலை கரையை கடக்கவுள்ள நிலையில், அந்த நேரத்தில் காலை மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆகையால், மழை தற்போது இல்லையென்று நினைக்க வேண்டாம், காற்றழுத்தம் கரையை கடக்கும் வரை முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருங்கள். 

தலைப்பு செய்திகள்

லஞ்சம் கேட்கும் போலீசாருக்கு இனி ஆப்பு! புகார் அளிக்க இதோ மாவட்ட வாரியான வாட்ஸ்அப் எண்கள்!
Bribe complaint WhatsApp number: லஞ்சம் கேட்கும் போலீசாருக்கு இனி ஆப்பு! புகார் அளிக்க இதோ மாவட்ட வாரியான வாட்ஸ்அப் எண்கள்!
திருவான்மியூர் முதல் உத்தண்டி.. கைவிடப்படுகிறதா ரூ.2,100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
திருவான்மியூர் முதல் உத்தண்டி! கைவிடப்படுகிறதா ரூ2100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Embed widget