ஓபிஎஸ்-ன் அரசியல் பயணம் திசை மாறுதா? திமுகவில் இணைந்த பரபரப்பு!
அதிமுகவை மீட்க நடத்திய போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அவர் பெரும் பின்னடைவை சந்தித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே கடுமையான யுத்தம் நடந்த வந்த நிலையில், அதிமுகவை மீட்க நடத்திய போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அவர் பெரும் பின்னடைவை சந்தித்தார். குறிப்பாக ஓபிஎஸ்க்கும், இபிஎஸ்க்கும் இடையேயான கருத்து மோதல் உச்சகட்டத்தின் காரணமாக ஒபிஎஸ்க்கு அதிமுகவின் கதவுகள் நிரந்தரமாக முடப்பட்டதால், அதிமுகவில் எப்படியாவது ஒன்றினைந்து விடலாம் என்று எதிர்பார்த்து பல நாட்களாக காத்திருந்த ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்களும் ஒவ்வொருவராக கலைந்து மற்ற கட்சிகளில் இணைய தொடங்கினர். இருப்பினும் ஓபிஎஸ் பாஜவை நம்பினார். ஆனால் பாஜகவோ அதிமுகவுடன் கைகோர்த்து ஓபிஎஸ்க்கு எந்தவித ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை என்று பேசப்படுகிறது.
வரும் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், ஓ. பன்னீர் செல்வத்துடன் இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலுங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். ஜேசிடி பிரபாகர், கு,ப, கிருஷ்ணன் ஆகியோர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில் மற்றொருபுறம் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சியை தொடங்கிவிட்டார். இந்த சூழலில், ஓ.பி.எஸ் தனது அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் அடுத்த அரசியல் வாழ்க்கை ஓ.பன்னீர்செல்வத்திற்கு கேள்விக்குறியாகி இருந்தது. இந்த நிலையில் யார் இல்லாத வெறும் கூடாரத்தை வைத்து என்ன செய்வது எதை நிரூபிப்பது என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில், முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை மகன் ரவீந்திரநாத் உடன் சென்று நேரில் சந்தித்து பேசினார்.
இதனால் அவர் திமுகவில் இணைவது உறுதி என பேசப்பட்டு வந்தது. நேற்று (பிப்ரவரி 26) ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்று முதலமைச்சர் தலைமையில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவரான நல்லக்கண்ணுவின் இறுதி அஞ்சலி நடைபெற்றதால் திமுகவில் ஓபிஎஸ் இணையும் நிகழ்வானது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர் செல்வத்தை திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சேகர்பாபு ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். இதனையடுத்து திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்றார். இதனையடுத்து ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஓ.பன்னீர் செல்வம் இணைந்தார். அப்போது உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐய்யப்பன், முன்னாள் எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.
ஓபிஎஸ் திமுகவில் இணைந்த நிலையில், அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.























