மேலும் அறிய

கொட்டித் தீர்க்கும் கன மழை: தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு!

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில்  கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் மூன்றாயிரம் கன அடியாக  அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120.65 கன அடியாக உள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேனி மாவட்டத்தில்  நேற்று இரவிலிருந்து தொடங்கிய மழை இன்று மாலை 4 மணி வரையில் கன மழை முதல் மிக கன மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார எல்லை பகுதிகளான போடி , குமுளி, கம்பம்  பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மிக கன மழை பெய்தது. இதன் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டது. கன மழை காரணமாக தமிழக , கேரள எல்லை சாலைகளான குமுளி வழிச்சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் இன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போடி மெட்டு பாதையில் பாறை விழுந்ததால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மூணார் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


கொட்டித் தீர்க்கும் கன மழை: தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு!

முல்லை  பெரியாறு அணை நிலவரம்

தமிழக, கேரளா எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணை  உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நீர்ப்பாசன ஆதாரமாகவும் இந்த முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில்  கனமழை பெய்து வருவதால் எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில்  தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. 


கொட்டித் தீர்க்கும் கன மழை: தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு!

இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று வரை வெறும் 300 கன அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3153.11 கன அடியாக அதிகரித்து வருகின்றது. மேலும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 400 கன அடியாகவும்,  அணையின் மொத்த நீர் இருப்பு 3479.40 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. தற்போது 152 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 120.65 அடியாக இருந்து வருகிறது. இதனைத் தவிர்த்து, அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

தொடர் கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர். கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவி பகுதிக்கு நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம்.


கொட்டித் தீர்க்கும் கன மழை: தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு!

இந்நிலையில்  சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை மற்றும் சுருளி அருவி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் கனமழை பெய்ததால் இன்று அதிகாலை முதலே அருவியில் அதிக அளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் இன்று முதல் தொடர் தடை விதித்துள்ளனர்.மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் சுருளி அருவியின் ஆற்று பகுதியிலும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்று பகுதிக்கு வரும் பக்தர்களும் பொதுமக்களும் கரையோரப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

இதேபோல்  பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் செய்த  கனமழையால்  அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


கொட்டித் தீர்க்கும் கன மழை: தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு!

இருந்தால் பாதுகாப்பு கருதி  அருவியில் குளிக்கவும்  அருவி பகுதிக்கு சென்று பார்க்கவும்  வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மேலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால்  அருவியில் நீர் வரத்து குறைந்து சீராகும் வரை குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur President's Rule: கவிழ்ந்தது பாஜக ஆட்சி:  மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.!
கவிழ்ந்தது பாஜக ஆட்சி: மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
King Maker Vijay: கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதாலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதாலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | GingeeChiranjeevi Controversy | TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur President's Rule: கவிழ்ந்தது பாஜக ஆட்சி:  மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.!
கவிழ்ந்தது பாஜக ஆட்சி: மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
King Maker Vijay: கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதாலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதாலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்! இந்த ஆண்டு இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையே மெட்ரோ!
ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்! இந்த ஆண்டு இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையே மெட்ரோ!
New Income Tax Bill 2025: மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்... எப்போது அமலுக்கு வரும் தெரியுமா.?
மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்... எப்போது அமலுக்கு வரும் தெரியுமா.?
MOTN Survey: தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு
தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு
முதல்வர் துறையிலேயே இப்படியா? பெண் காவலர்களுக்கு பாதுக்காப்பில்லையா? இணை ஆணையர் சஸ்பெண்ட்
முதல்வர் துறையிலேயே இப்படியா? பெண் காவலர்களுக்கு பாதுக்காப்பில்லையா? இணை ஆணையர் சஸ்பெண்ட்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.