மேலும் அறிய

அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய விவகாரம் - வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா மனுத்தாக்கல்

நான் எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்

பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2018 செப்டம்பர் 17ஆம் தேதி வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கோவில் நிலங்களை லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்பனை செய்கின்றனர் என்றும் பெண்களின் மரியாதையை குறைக்கும் வகையிலும் கொச்சைபடுத்தும் வகையிலும் பேசியதாக கூறி என் மீது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அளித்த புகாரின் அடிப்படையில்  விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 

அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய விவகாரம் - வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா மனுத்தாக்கல்
 
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நான் எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
 


மதுரையில் கட்டிடம் இடிந்து காவலர் பலியான வழக்கு - கீழ்தளத்தில் வாடகைக்கு இருந்த  நாகராஜன்,   சுப்பிரமணியன் ஆகியோர் மீதான வழக்குகளை  ரத்து 
 
மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் பலியானது தொடர்பான வழக்கில்,   வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மதுரை வில்லாபுரம் நாகராஜன்,  அவனியாபுரம் சுப்பிரமனியன் உள்ளிட்டோர் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மனுதாரர்கள் பழமையான கட்டிடத்தின் கீழ்தளத்தில் இருந்த கடையை வாடகைக்கு நடத்தி வந்துள்ளனர்.
 
வாடகைக்கு உள்ள இவர்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. மேலும் பழமையான கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்து அதன் உரிமையாளர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த  2020 அக்டோபர் 22ல் கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் பலியானார் . இதைத்தொடர்ந்து கட்டட உரிமையாளர் மற்றும் கீழ்தளத்தில் வாடகைக்கு இருந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல.
 
துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. மனுதாரர்களுக்கு எந்தவொரு குற்ற நோக்கமும் இல்லை.  இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. மனுதாரர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை.  ஆகவே, நாகராஜன்,  சுப்பிரமணியன் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள்  ரத்து செய்யப்படுகிறது. பழமையான கட்டிடம் இடிந்து காவலர் பலியானது தொடர்பான பிரதான வழக்கு தொடர்ந்து நடைபெறும்" என உத்தரவிட்டார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Embed widget