மேலும் அறிய

கம்பம் , போடியில் தொடரும் கஞ்சா விற்பனை - போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

தமிழக , கேரள எல்லை மாவட்டமான தேனி மாவட்டத்தின் எல்லை பகுதிகளான கம்பம் , போடி போன்ற பகுதிகளில் தொடரும் கஞ்சா விற்பனை. மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?

தமிழக, கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமாக கம்பம் விளங்குகிறது. இந்தப் பகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. தமிழக கேரள எல்லையை ஒட்டி உள்ளதால் கம்பத்திலிருந்து ஏராளமான வணிக ரீதியான போக்குவரத்துகள் தமிழக-கேரள இரு மாநிலங்களுக்குமிடையே இருந்து வருகிறது.

கேரள எல்லையை ஒட்டியுள்ள கம்பம் மெட்டு, குமுளி, கட்டப்பனை, வண்டிப்பெரியார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கேரள மாநிலத்தவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கம்பம் பகுதிக்கு அதிகம் வருவதுண்டு, அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த வளர்ந்து வரும் நகரமாக கம்பம் திகழ்கிறது. அதேபோலத்தான் இரு மாநில எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள போடி நகர் பகுதியும், கம்பம் இருபோக விவசாயத்திற்கு மட்டும் பிரபலமானது அல்ல, இங்கு கஞ்சா விற்பனையும் பிரபலமானது என கூறப்படுகிறது. 

கம்பம் பகுதியில் சட்டவிரோதமாக அதிக அளவில் கஞ்சா விற்பனை என்பது இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என புகார் எழுந்துள்ளது. தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் கம்பத்திற்கு வந்து கஞ்சா வாங்கி கொண்டு செல்வது தற்போதும் தொடர்கதையாகி வருகிறது. ”கஞ்சா போதையினா அது  கம்பம் கஞ்சா தான்” என்ற வசனம் பழைய மலையாள படங்களிலும் வந்துள்ளது. அது போலதான் கம்பத்தில் கிடைக்கும் கஞ்சாவின் போதைக்கு தனி மார்க்கெட் உள்ளது. கம்பம் வடக்குப்பட்டி பகுதியில் மற்றும் பல்வேறு பகுதிகளில் தற்போது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது,

கம்பம் , போடியில் தொடரும் கஞ்சா விற்பனை - போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

தற்போது விலை ஏற்றமும் அதிகப்படியாக கஞ்சாவிற்கு கூடுதல் மார்க்கெட் எகிறியுள்ளது. இதனை தடுப்பதற்கு தேனி மாவட்ட காவல்துறை மற்றும் கேரள  இடுக்கி மாவட்ட காவல்துறை என இரு மாநில எல்லைப் பகுதிகளில் கஞ்சா கடத்துவது குறித்தும் தடுப்பு நடவடிக்கைகளிலும் அவ்வப்போது போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் கம்பத்திலிருந்து கஞ்சா வாங்கிக்கொண்டு செல்லும்போது போலீசாரால் பிடிபடுவது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த சம்பவங்களில் குறிப்பாக இளைஞர்கள் மட்டுமே அதிகமாக சிக்கி வருகின்றனர். காரணம் இவர்கள் குடிப்பதற்காக வாங்கிச் செல்லும் 100 கிராம், 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்வதும் போன்ற சம்பவங்களால் போலீசார் கஞ்சா  தடுப்பு நடவடிக்கைகளை கணக்கு காட்டி வருகின்றனர் .ஆனால் மொத்தமாக தேக்கி வைக்கப்படும் கஞ்சா எங்கிருந்து வருகிறது, என்றும் தேக்கிவைத்து விற்பவர்கள் யார் என்று கண்டறிய போலீசார் அவ்வப்போது தவறி வருவதாக புகார் எழுகின்றது.

இந்த பகுதிக்கு வரும் கஞ்சாவானது ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து குறிப்பாக கம்பம் பகுதியில் அதிகமாக இறக்குமதி ஆவதாகவும் கூறப்படுகிறது. தேனி மாவட்டத்தில் பல வருடங்களுக்கு முன்பு வருஷநாடு பகுதியில் கஞ்சா தோட்டங்கள் அளிக்கப்பட்டதும், அதேபோல சில வருடங்களுக்கு முன்பு கம்பம் ஆலமரம் கோவில் தெருவில் மலையடிவாரத்தில் கஞ்சா தோட்டம் விளைவித்து இருந்ததை போலீசார் அழித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதைவிட சில நாட்களுக்கு முன்பு வெளி மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கிலோ கணக்கில் கஞ்சாவை தேனி மாவட்டத்திற்குள் கடத்தி வந்ததும் அவர் பிடிபட்டதும் நடந்துள்ளது. சமீபத்தில் கஞ்ச வியாபாரிகளுடன் கூட்டு சேர்ந்து கஞ்சா கடத்திய காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் கஞ்சா வியாபாரிகள் உட்பட போலீசார் மீதும் வழக்கு பதிவும் செய்யப்பட்டது  நடந்துள்ளது. இது போல்  தொடர்ந்து சட்டவிரோதமாக தொடரும் இந்த கஞ்சா விற்பனையை தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகம் எப்போது தடுக்க போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget