![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Dindigul: மின்சாரத்தை கட் செய்ய வந்த ஊழியர்கள்! பொதுமக்கள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்! நடந்தது என்ன?
40 குடும்பத்தினரின் பட்டா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சோலார் பேனல் அமைக்க வந்த ஊழியர்கள் மற்றும் மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார ஊழியர்களை விரட்டி அடித்த ஊர் பொதுமக்கள்.
![Dindigul: மின்சாரத்தை கட் செய்ய வந்த ஊழியர்கள்! பொதுமக்கள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்! நடந்தது என்ன? dindigul village people chased away the electricity workers who came to disconnect the electricity Dindigul: மின்சாரத்தை கட் செய்ய வந்த ஊழியர்கள்! பொதுமக்கள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்! நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/23/87ee2c98f9ce52d8b33da317c3a7fbfc1716468183714739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ளது நாகன்களத்தூர் இப்பகுதிதியில் காலம் காலமாக 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
இந்தநிலையில் சின்னத்தம்பி என்பவர் அவசர தேவைக்காக தன்னுடைய நிலத்தை ஈரோடு பகுதியில் சேர்ந்த ஒருவரிடம் அடகு வைத்து 8 லட்ச ரூபாய் கடன் வாங்கி வட்டியும் கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் அந்த இடத்தை திருப்ப சென்றபோது அந்த இடத்தை வேறு நபருக்கு விற்பனை செய்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னத்தம்பி வேடசந்தூர் நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்து தற்போது வரை வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நிலத்தை வாங்கிய வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த தனியார் சோலார் நிறுவனமான ராபின்சன் சூரிய மின்சக்தி தயாரிக்கும் நிறுவனம் இப்பகுதியில் உள்ள 11 நபர்களின் பெயரில் உள்ள பட்டா குளத்தையும் 40 குடும்பத்தினர் வீட்டையும் விலைக்கி வாங்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், பொது குளத்தையும் அதில் உள்ள ஊராட்சியால் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு தண்ணீர் தொட்டி அனைத்தையும் இடித்து விட்டு சோலார் அமைப்பதற்காக ஆட்களுடன் தொடர்ந்து வந்து மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனியார் சோலார் நிறுவனத்திற்கு ஆதரவாக வந்த மின்சார ஊழியர்கள் மின்சாரத்தை துண்டிக்க சென்றதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மின்சாரத்தை துண்டிக்க வந்த மின் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மின்சார ஊழியர் வாகனத்தை எடுத்துவிட்டு தப்பியோடினர்.
TN Weather Update: தமிழகத்திற்கு பாதிப்பா? REMAL புயலின் தாக்கம் எங்கெல்லாம்? - முழு விவரம்
அதேபோல் குளத்திற்குள் ஆக்கிரமிப்பு செய்ய வந்த தனியார் சோலார் நிறுவனத்தின் ஊழியர்களிடம் குளத்தில் உள்ள பட்டா யார் எழுதிக் கொடுத்தது? எங்களது 11 பேர் பெயரில் உள்ளது. பட்டாவை முதலில் வழங்குங்கள் ஊராட்சி ரசீது உள்ளதா? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பியதால் பொதுமக்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து ஊழியர்கள் தப்பித்து ஓடினர். இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)