மேலும் அறிய

Thiruvalluvar: காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருப்பது புது சர்ச்சையாக வெடித்துள்ளது.

Thiruvalluvar Controversy: ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருப்பது புது சர்ச்சையாக வெடித்துள்ளது. 'திருவள்ளுவர் தின விழா' என்ற பெயரில் ஆளுநர் மாளிகை அழைப்பிதழை வெளியிட்டுள்ளது.

மீண்டும் வெடித்த திருவள்ளுவர் சர்ச்சை:

நாளை மாலை 5 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தலைமையில் திருவள்ளுவர் தின விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் காவி உடை அணிந்தவாறு திருவள்ளுவரின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது.

திருவள்ளுவர் படத்தை மீண்டும் காவி நிறத்தில் வெளியிடப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவி உடையில் வள்ளுவர் படத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ் அமைப்புகள் அறிவித்துள்ளன.

உலகப் பொதுமறை என திருக்குறள் போற்றப்படுகிறது. அதனை எழுதிய திருவள்ளுவர் வெள்ளை உடையணிந்தபடி இருக்கும் படம், தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

புயலை கிளப்பும் ஆளுநர்:

இப்படியிருக்க, சமீபகாலமாக திருவள்ளுவரை மையப்படுத்தி தொடர் சர்ச்சை வெடித்து வருகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நூலக நுழைவு வாயிலில் புதிதாக திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டது.

வழக்கமான வெள்ளை நிற உடையணிந்த திருவள்ளுவர் படத்திற்கு பதிலாக, காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, கோட் சூட்டில் உள்ள திருவள்ளுவரின் புகைப்படத்தினை பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்துகளை பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

அதன் உச்சமாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி, “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்புக்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காலத்தால் அழிக்க இயலாத அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருக்கிறது. இந்தப் புனித நாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆளுநரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், "திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை. திருவள்ளுவரை ஒரு துறவி என யாருமே கூறியது கிடையாது.

அவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி இருந்ததாகவும் கருத்து இருக்கிறது. இல்லறம் குறித்து அவரைப் போல கவித்துவமாக எழுதியிருப்பவர்கள் யாருமே இருக்க முடியாது. திருக்குறளை படித்து புரிந்து கொள்ளக்கூடிய நாம் அவரை துறவியாக பார்த்ததே கிடையாது. திருக்குறளில் எந்த ஒரு மத அடையாளமும் கிடையாது. சனாதனம் உள்ளிட்ட வேறு எந்த மதத்தையுமே நாம் அவர் மீது திணிக்க முடியாது" என்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trichy Airport: திருச்சி மக்கள் மகிழ்ச்சி..! பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம் - ஏராளமான வசதிகள்
திருச்சி மக்கள் மகிழ்ச்சி: பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம்-ஏராளமான வசதிகள்
PM Modi Cabinet: மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! ஸ்கெட்ச் போட்ட சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! அதிரடி காட்டும் சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
Breaking News LIVE: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
Breaking News LIVE: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
BJP New Chief: பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி - அமித் ஷா கூட்டணி
பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி-அமித் ஷா கூட்டணி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

NEET Thiruvarur student  : அரசுப்பள்ளி, விவசாயி மகன்! NEET-ல் சாதித்த மாணவர்! நெகிழ்ச்சி சம்பவம்PM Modi 3.0 Cabinet  : அதிக பலத்துடன் அமைச்சரவை! அரசு பலம் இழந்ததா? காரசார விவாதம்PM Modi First Signature : பதவியேற்ற அடுத்த நாளே!மோடியின் முதல் கையெழுத்து எதற்காக தெரியுமா?Suresh Gopi  : ”அமைச்சர் பதவி வேண்டாம்”சுரேஷ் கோபி பகீர் காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy Airport: திருச்சி மக்கள் மகிழ்ச்சி..! பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம் - ஏராளமான வசதிகள்
திருச்சி மக்கள் மகிழ்ச்சி: பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம்-ஏராளமான வசதிகள்
PM Modi Cabinet: மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! ஸ்கெட்ச் போட்ட சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! அதிரடி காட்டும் சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
Breaking News LIVE: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
Breaking News LIVE: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
BJP New Chief: பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி - அமித் ஷா கூட்டணி
பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி-அமித் ஷா கூட்டணி
ICC T20 Wolrd Cup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய தென்னாப்ரிக்கா..! 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
ICC T20 Wolrd Cup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய தென்னாப்ரிக்கா..! 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
Rasipalan: மேஷத்துக்கு ஆர்வமின்மை, ரிஷபத்துக்கு வெற்றி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மேஷத்துக்கு ஆர்வமின்மை, ரிஷபத்துக்கு வெற்றி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Watch video : அம்முவுக்கும் பார்த்திவ் மணிக்கும் சம்திங் சம்திங்கா? வைரலாகும் வீடியோ
Watch video : அம்முவுக்கும் பார்த்திவ் மணிக்கும் சம்திங் சம்திங்கா? வைரலாகும் வீடியோ
குற்றவாளி வாக்குமூலம்.. காஞ்சிபுரம் கோயில் அருகே கஞ்சா விற்பனை ஜோர், அதிர்ச்சியில் போலீஸ்
குற்றவாளி வாக்குமூலம்.. காஞ்சிபுரம் கோயில் அருகே கஞ்சா விற்பனை ஜோர், அதிர்ச்சியில் போலீஸ்
Embed widget