மேலும் அறிய

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே கே.கீரனூர் கிராமம் மீண்டும் நில அதிர்வு! பொதுமக்கள் பீதி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கே.கீரனூர் என்ற கிராமம் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கே.கீரனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்களும், சில வீடுகளில் ஓடுகளும் உடைந்து சேதமடைந்தன. இதையடுத்து வருவாய்த்துறையினர் மற்றும் புவியியல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது டெல்லியில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் 1.5 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னரும் 2 நாட்கள் லேசான சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டது. அதன்பின்னர் அந்த அதிர்வு நின்று போனது.

தேனி : உயரம் மாறி மாறி காட்சி தரும் சிவலிங்கம்.. பூலா நந்தீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்


திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே கே.கீரனூர் கிராமம் மீண்டும் நில அதிர்வு! பொதுமக்கள் பீதி

இந்தநிலையில் கே.கீரனூர் கிராமத்தில் நேற்று  இரவு 10.50 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டது. அப்போது 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. பாத்திரங்கள் மேலே இருந்து கீழே உருண்டன. கட்டில்கள், நாற்காலிகள் அங்குமிங்கும் ஆடின. இதனால் பொதுமக்கள் பீதியில் வெளியே ஓடி வந்து தெரு ஓரங்களிலும், சாலைகளிலும் தஞ்சம் அடைந்தனர்.


திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே கே.கீரனூர் கிராமம் மீண்டும் நில அதிர்வு! பொதுமக்கள் பீதி

பின்னர் அவர்கள் இதுகுறித்து ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துசாமிக்கும், கள்ளிமந்தையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க ஏற்பாடு செய்தனர். எனினும் பொதுமக்கள் மீண்டும் நிலஅதிர்வு வந்துவிடுமோ, வீடுகள் இடிந்து விடுமோ என்ற அச்சத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பும் சாலையோரங்களிலும் விடிய, விடிய தூங்காமல் காத்திருந்தனர். 


திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே கே.கீரனூர் கிராமம் மீண்டும் நில அதிர்வு! பொதுமக்கள் பீதி

இந்தநிலையில் இன்று காலை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், துணை ஆட்சியர் தினேஷ்குமார், தாசில்தார் முத்துசாமி, கனிமவள உதவி இயக்குனர் பூர்ண வேல். புவியியலாளர் அஸ்வினி ஆகியோர் கே.கீரனூர் கிராமத்துக்கு வருகை தந்தனர். பின்னர் அவர்கள் நிலஅதிர்வால் விரிசல் ஏற்பட்டு இருந்த வீடுகளை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். 


திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே கே.கீரனூர் கிராமம் மீண்டும் நில அதிர்வு! பொதுமக்கள் பீதி

இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாகன் கூறுகையில், வீடு மிகவும் சேதமடைந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டம் மூலமாக புதிதாக வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். லேசான விரிசல் ஏற்பட்டு உள்ளவர்களுக்கு வீடு சரி செய்து தரப்படும். பொதுமக்கள் யாரும் பயப்படவேண்டாம். எதனால் இந்த நிலஅதிர்வு ஏற்படுகிறது என்பது குறித்து கண்டறியப்படும். பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு போதிய இடவசதி, உணவு வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார்.  இந்த நிலஅதிர்வு ஒட்டன்சத்திரம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Embed widget