மேலும் அறிய

மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை; வியாபாரிகள் வாக்குவாதம் - திண்டுக்கல்லில் பரபரப்பு

மீன் மார்க்கெட்டில் மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்ற பொழுது வியாபாரிகள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவின் பெயரில் சின்னாளபட்டி பகுதியில் மீன் வியாபாரம் செய்து வரும் நபர்களிடம் அதிகாலை மீன்வளத்துறை மற்றும் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அழுகிய மீன்களும் மேலும் மீன்கள் கெட்டுப் போகாமல் பயன்படுத்தப்படும் ரசாயன மருந்துகளும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனை அடுத்து அவர்களிடம் விசாரணை செய்தது திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதியில் சோலை கால் தியேட்டர் அருகே உள்ள மீன் சந்தையில் மீனை வாங்கியதாக கூறியுள்ளனர். 


மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை; வியாபாரிகள் வாக்குவாதம் - திண்டுக்கல்லில் பரபரப்பு

சின்னாளபட்டியில் இருந்து மீன் சந்தைக்கு வந்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் உள்ள மீன்களை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியதை அடுத்து மீன் வியாபாரிகள் அதிகாரிகளை சோதனை செய்ய விடவில்லை என்று கூறப்படுகிறது . மேலும் வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நீங்கள் கொண்டுவந்த மருந்தை நாங்கள் வைத்து சோதனை செய்து தருகிறோம் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து ஒரு சில மீன்களில் அந்த மருந்துகளை ஊற்றியுள்ளனர். மீன்கள் அனைத்தும் சிவப்பு கலரில் மாறி உள்ளது உடனடியாக அவர்கள் வைத்திருந்த மருந்தை வாங்கி உயிருள்ள மீன்களில் மருந்தை ஊற்றியுள்ளனர்.


மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை; வியாபாரிகள் வாக்குவாதம் - திண்டுக்கல்லில் பரபரப்பு

அந்த மீன்களும் சிவப்பு கலரில் மாறி உள்ளதால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே எங்கள் மீது புகார் கூறுகின்றனர் என்று மீன் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் கூறும் பொழுது, இறந்து போன கெட்டுப்போன மீன்களில் மருந்தை ஊற்றினால் கண்டிப்பாக தெரிந்து விடும் அதேபோல் இவர்கள் அதிகாலையில் இருந்து இந்த மீன்களை கையாண்டு வருகின்றனர். அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் மீன்கள் ஐஸ் பெட்டியில் அடைக்கப்பட்டு ரசாயன மருந்துகள் மூலம் தான் திண்டுக்கல் சந்தைக்கு வருகிறது, அதையும் இவர்கள் கையால் பயன்படுத்தி இருப்பார்கள். இதன் காரணமாக உயிர் உள்ள மீன்களில் மருந்தை ஊற்றிய பொழுது சிவப்பு கலரில் வருகிறது.

நாங்கள் நேரடியாக சோதனை செய்தால் மீன் மார்க்கெட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியும். அதேபோல் நாங்கள் காவல்துறை அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு செல்லவில்லை. மாவட்ட ஆட்சியர் உத்தரவு பேரில் தற்போது ஆய்வு செய்ய வந்த போது திண்டுக்கல் மீன் சந்தை வியாபாரிகள் எங்களை அனுமதிக்கவில்லை என்று கூறினர். மீன் சந்தை வியாபாரிகள் அதிகாரிகள் வேண்டுமென்றே எங்கள் மீது புகார் கூற வேண்டும் என்று இங்கு வந்துள்ளனர். மீன்களையும் இங்கிருந்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர் என்றனர். மீன் சந்தையில் காலையில் அதிகாரிகள் மற்றும் மின் சந்தை வியாபாரிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
ABP Premium

வீடியோ

விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
Embed widget