மேலும் அறிய

மதுபோதையில் ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக 9 இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த நபர் கைது

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக 9 இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்களை நள்ளிரவில் தீ வைத்து எரிக்கும் சம்பவங்கள் தொடர்கதை ஆகி வந்த நிலையில் இதற்கு முன்பாக ஏழு இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டது இன்றைய தினம் அதிகாலை எரியோடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் மாலைகோயில் தெருவை சேர்ந்த சேகர்(52) என்பவரின் இரு சக்கர வாகனமும் சந்தைகளில் வெள்ளைபூண்டு வியாபாரம் செய்யும் துரைச்சாமி நாடார் தெருவை சேர்ந்த கோபால்(50)என்பவரின் இரு சக்கர வாகனமும் எரிக்கப்பட்டது. இன்றைய தினம் இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து மொத்தம் ஒன்பது இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


மதுபோதையில் ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக 9 இருசக்கர வாகனங்களை தீ வைத்து  எரித்த  நபர் கைது

கடந்த ஒரு மாத காலத்தில் எரியோடு துரைச்சாமி நாடார் தெருவை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் கார்த்திக், பன் வியாபாரி முருகன், எரியோடு வேன்டிரைவர் ராஜா, தென்னம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் சவுந்திரராஜன், எரியோடு நடுத்தெருவை சேர்ந்த வியாபாரி சின்ராஜ், பாண்டியன்நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன், எரியோடு வடக்கு தெருவை சேர்ந்த சக்திவேல் ஆகியோரின் மோட்டார் சைக்கிள் அடுத்தடுத்து தீ வைத்து எரிக்கப்பட்டன.


மதுபோதையில் ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக 9 இருசக்கர வாகனங்களை தீ வைத்து  எரித்த  நபர் கைது

இது போன்ற சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நபர்களை பிடிப்பது போலீசாருக்கும் பெரும்சவாலாக இருந்து வருகிறது. மர்ம நபரை பிடிப்பதற்கு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபரின் உருவம் பதிவாகவில்லை. இந்த நிலையில் இதுவரை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகாத மர்ம நபரின் உருவம் நேற்று முன்தினம் பதிவாகி இருந்தது. எரியோடு துரைச்சாமி நாடார் தெரு, மாலைக்கோவில் தெருவில் இருந்து கரூர் சாலைக்கு மர்ம நபர் நள்ளிரவில் நடந்து செல்லும் உருவம் பதிவாகி இருந்தது. அதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.


மதுபோதையில் ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக 9 இருசக்கர வாகனங்களை தீ வைத்து  எரித்த  நபர் கைது

விசாரணையில் அந்த நபர், எரியோடு மாலைகோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன்  என்பது தெரியவந்தது. தச்சுதொழிலாளியான அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது தச்சு வேலை மூலம் கிடைத்த பணத்தில் மதுபானம் குடித்து விட்டு, போதை தலைக்கு ஏறியதும் நள்ளிரவில் தனது கண்ணில் தென்படுகிற மோட்டார் சைக்கிள்கள் மீது தீ வைத்து அவர் எரித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவுக்கு இந்த சம்பவத்தில் அவர் ஈடுபட்டதாக போலீசாரிடம் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். எரியோட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்து 9 இரண்டு சக்கர வாகனங்களை தீ வைத்து எரித்தவரை போலிசார் பிடித்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Britain Election 2024: இங்கிலாந்தில் ஆட்சியை இழக்கும் அந்த ஊர் காங்கிரஸ் - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்தில் ஆட்சியை இழக்கும் அந்த ஊர் காங்கிரஸ் - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: சென்னை: அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் விபத்து: இளைஞரின் கை துண்டானது
Breaking News LIVE, June 5: சென்னை: அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் விபத்து: இளைஞரின் கை துண்டானது
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Britain Election 2024: இங்கிலாந்தில் ஆட்சியை இழக்கும் அந்த ஊர் காங்கிரஸ் - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்தில் ஆட்சியை இழக்கும் அந்த ஊர் காங்கிரஸ் - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: சென்னை: அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் விபத்து: இளைஞரின் கை துண்டானது
Breaking News LIVE, June 5: சென்னை: அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் விபத்து: இளைஞரின் கை துண்டானது
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Embed widget