மேலும் அறிய

மதுபோதையில் ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக 9 இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த நபர் கைது

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக 9 இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்களை நள்ளிரவில் தீ வைத்து எரிக்கும் சம்பவங்கள் தொடர்கதை ஆகி வந்த நிலையில் இதற்கு முன்பாக ஏழு இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டது இன்றைய தினம் அதிகாலை எரியோடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் மாலைகோயில் தெருவை சேர்ந்த சேகர்(52) என்பவரின் இரு சக்கர வாகனமும் சந்தைகளில் வெள்ளைபூண்டு வியாபாரம் செய்யும் துரைச்சாமி நாடார் தெருவை சேர்ந்த கோபால்(50)என்பவரின் இரு சக்கர வாகனமும் எரிக்கப்பட்டது. இன்றைய தினம் இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து மொத்தம் ஒன்பது இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


மதுபோதையில் ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக 9 இருசக்கர வாகனங்களை தீ வைத்து  எரித்த  நபர் கைது

கடந்த ஒரு மாத காலத்தில் எரியோடு துரைச்சாமி நாடார் தெருவை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் கார்த்திக், பன் வியாபாரி முருகன், எரியோடு வேன்டிரைவர் ராஜா, தென்னம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் சவுந்திரராஜன், எரியோடு நடுத்தெருவை சேர்ந்த வியாபாரி சின்ராஜ், பாண்டியன்நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன், எரியோடு வடக்கு தெருவை சேர்ந்த சக்திவேல் ஆகியோரின் மோட்டார் சைக்கிள் அடுத்தடுத்து தீ வைத்து எரிக்கப்பட்டன.


மதுபோதையில் ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக 9 இருசக்கர வாகனங்களை தீ வைத்து  எரித்த  நபர் கைது

இது போன்ற சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நபர்களை பிடிப்பது போலீசாருக்கும் பெரும்சவாலாக இருந்து வருகிறது. மர்ம நபரை பிடிப்பதற்கு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபரின் உருவம் பதிவாகவில்லை. இந்த நிலையில் இதுவரை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகாத மர்ம நபரின் உருவம் நேற்று முன்தினம் பதிவாகி இருந்தது. எரியோடு துரைச்சாமி நாடார் தெரு, மாலைக்கோவில் தெருவில் இருந்து கரூர் சாலைக்கு மர்ம நபர் நள்ளிரவில் நடந்து செல்லும் உருவம் பதிவாகி இருந்தது. அதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.


மதுபோதையில் ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக 9 இருசக்கர வாகனங்களை தீ வைத்து  எரித்த  நபர் கைது

விசாரணையில் அந்த நபர், எரியோடு மாலைகோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன்  என்பது தெரியவந்தது. தச்சுதொழிலாளியான அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது தச்சு வேலை மூலம் கிடைத்த பணத்தில் மதுபானம் குடித்து விட்டு, போதை தலைக்கு ஏறியதும் நள்ளிரவில் தனது கண்ணில் தென்படுகிற மோட்டார் சைக்கிள்கள் மீது தீ வைத்து அவர் எரித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவுக்கு இந்த சம்பவத்தில் அவர் ஈடுபட்டதாக போலீசாரிடம் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். எரியோட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்து 9 இரண்டு சக்கர வாகனங்களை தீ வைத்து எரித்தவரை போலிசார் பிடித்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Embed widget