மேலும் அறிய

திண்டுக்கல்: இறப்பு சான்றிதழ் பெற ரூ.3 ஆயிரம் லஞ்சம் - துணை தாசில்தார் கைது

திண்டுக்கல் அருகே தலையாரிபட்டியில் இறப்பு சான்றிதழ் பெற 3 ஆயிரம் ருபாய் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த தலையாரிபட்டியை சேர்ந்தவர் இளமுருகன் (49). இவர், 1986-ம் ஆண்டு இறந்த தனது பாட்டி திருமலை அம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதுதொடர்பான விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து திருமலை அம்மாளுக்கான இறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக இளமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

குழந்தைக்கு நாக்கு அறுவை சிகிச்சையின்போது பிறப்புறுப்பிலும் அறுவை சிகிச்சை செய்தது ஏன்? : மதுரை அரசு மருத்துவமனை ஓபன் டாக்!


திண்டுக்கல்:  இறப்பு சான்றிதழ் பெற ரூ.3 ஆயிரம் லஞ்சம் -  துணை தாசில்தார் கைது

அப்போது, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணியாற்றும் துணை தாசில்தார் ஜெயபிரகாஷ், சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளமுருகன் தான் கூலி வேலை செய்வதாகவும், தன்னால் அவ்வளவு பணத்தை தர இயலாது என தெரிவித்துள்ளார்.

வீடில்லை... விசாலமான உள்ளம் மட்டுமே... - தெருநாய்களுடன் குடைக்குள் குட்டித் தூக்கம் - வைரல் க்ளிக்

பின்னர் ஒரு வழியாக ரூ.3 ஆயிரம் கொடுத்தால் உடனடியாக இறப்பு சான்றிதழ் வழங்குவதாக ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். அந்த பணத்தை கொடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இளமுருகன், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் மற்றும் போலீசார் இளமுருகன் கொடுத்த புகார் உண்மை தானா? என விசாரணை நடத்தினர்.

அதில் துணை தாசில்தார் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ரசாயன பொடி தடவப்பட்ட ரூ.3 ஆயிரத்தை இளமுருகனிடம் கொடுத்து துணை தாசில்தாரிடம் கொடுக்கும்படி கூறினர்.


திண்டுக்கல்:  இறப்பு சான்றிதழ் பெற ரூ.3 ஆயிரம் லஞ்சம் -  துணை தாசில்தார் கைது

அவரும் அந்த பணத்தை வாங்கிக்கொண்டு நேற்று மாலை ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்றுள்ளார். இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர்  நாகராஜன் தலைமையில் காவல் ஆய்வாளர் ரூபா கீதா ராணி மற்றும் போலீசார் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சாதாரண உடையில் மறைந்திருந்தனர். தொடர்ந்து அங்கு வந்த இளமுருகன், ஜெயபிரகாஷிடம் தான் கொண்டு வந்த பணத்தை கொடுத்தார்.

Coimbatore Day : கோயம்புத்தூருக்கு 218 வது பிறந்த நாள்: ஆர்ப்பரிக்கும் சில்லென்ற கோவையன்ஸ்...!

அதை அவர் வாங்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜெயபிரகாசை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மற்றொரு கட்டிடத்துக்கு அவரை அழைத்துச்சென்று விசாரணை செய்தனர். லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்ட நிலையில் அவரை அங்கிருந்து கைது செய்து அழைத்து சென்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
Happy Ramadan 2025 Wishes: அசத்தல் கிரீட்டிங் கார்டுகள்! ரம்ஜான் பண்டிகையை இப்படியும் கொண்டாடுங்கள்! வாழ்த்து செய்திகள் இதோ
Happy Ramadan 2025 Wishes: அசத்தல் கிரீட்டிங் கார்டுகள்! ரம்ஜான் பண்டிகையை இப்படியும் கொண்டாடுங்கள்! வாழ்த்து செய்திகள் இதோ
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi Visit

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
Happy Ramadan 2025 Wishes: அசத்தல் கிரீட்டிங் கார்டுகள்! ரம்ஜான் பண்டிகையை இப்படியும் கொண்டாடுங்கள்! வாழ்த்து செய்திகள் இதோ
Happy Ramadan 2025 Wishes: அசத்தல் கிரீட்டிங் கார்டுகள்! ரம்ஜான் பண்டிகையை இப்படியும் கொண்டாடுங்கள்! வாழ்த்து செய்திகள் இதோ
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
Myanmar Earthquake: மியான்மர் பயங்கரம், 1,600-ஐ கடந்த உயிரிழப்புகள் - உலகின் மோசமான நிலநடுக்கங்கள் பற்றி தெரியுமா?
Myanmar Earthquake: மியான்மர் பயங்கரம், 1,600-ஐ கடந்த உயிரிழப்புகள் - உலகின் மோசமான நிலநடுக்கங்கள் பற்றி தெரியுமா?
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
கணவனும் வேண்டாம்; வேலையும் வேண்டாம்! 45 கிலோ எடையை குறைத்த அமெரிக்க பெண்! அவரே சொல்லும் ரகசியம்!
கணவனும் வேண்டாம்; வேலையும் வேண்டாம்! 45 கிலோ எடையை குறைத்த அமெரிக்க பெண்! அவரே சொல்லும் ரகசியம்!
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
Embed widget