மேலும் அறிய

மதுரை : கட்டடம் இடிந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது - டி.ஜி.பி சைலேந்திரபாபு

கட்டடம் இடிந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது என டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி.

மதுரை மாநகர் எல்கைக்கு உட்பட்ட விளக்குத்தூண் காவல் நிலையத்தில் காவலர் கண்ணன் மற்றும் சரவணன் இருவரும் இரவு நேர ரோந்து பணியில் வழக்கம்போல் ஈடுபட்டுள்ளர். இந்நிலையில்  நள்ளிரவு 12.30மணியளவில் நெல்பேட்டை அருகே உள்ள கடை ஒன்றின் முன்பாக  நின்றுகொண்டிருந்தபோது  அந்த பகுதியில் இருந்த முகம்மது இதிரீஸ் என்பவருக்கு சொந்தமான 110 வருட பழமையான கட்டிடம் திடிரென இடிந்து விழுந்தது. இதனால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மற்றொரு காவலரான கண்ணன் பலத்த காயங்களுடன் மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் கட்டிட விபத்தில் உயிரிழந்த காவலரின் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

 உயிரிழந்த காவலர் சரவணனின் உடல் மதுரை குற்றப்பிரிவு பகுதியிலுள்ள காவலர் குடியிருப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு காவலர் சரவணனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் காவலரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மதுரை : கட்டடம் இடிந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது - டி.ஜி.பி சைலேந்திரபாபு
இதனை தொடர்ந்து வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தென்மண்டல ஐ.ஜி அன்பு, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், எம்.எல்.ஏக்கள் பூமிநாதன் , வெங்கடேசன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு சம்பவம் நடைபெற்ற பகுதியை ஆய்வு மேற்கொண்ட பின்னர் , சிகிச்சையில் உள்ள காவலர் கண்ணன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மதுரை : கட்டடம் இடிந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது - டி.ஜி.பி சைலேந்திரபாபு
 
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து டிஜிபி சைலேந்திரபாபு, ”இரவு ரோந்து பணியின் போது கட்டிட விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் சரவணனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம். சரவணின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் நிதியுதவியும், அரசு பணியும், கண்ணனின் குடும்பத்திற்கு 5லட்சம் நிதியுதவியும் அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம். சிகிச்சையில் உள்ள கண்ணன் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன். மதுரை நகரில் பழமையான கட்டடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ள நிலையில் இனி இது போன்ற நிகழ்வு நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்டட இடிந்த விவகாரத்தில் வழக்குபதிவு விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றார்.
 

தலைப்பு செய்திகள்

பழனி முருகன் கோயில் தரிசனத்தில் அதிரடி மாற்றம்! ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு!
பழனி முருகன் கோயில் தரிசனத்தில் அதிரடி மாற்றம்! ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு!
மதுரை: சாலையில் தொலைந்த பணம்... சிசிடிவி உதவியுடன் மீட்டெடுத்த பெண் காவலர்கள்!
மதுரை: சாலையில் தொலைந்த பணம்... சிசிடிவி உதவியுடன் மீட்டெடுத்த பெண் காவலர்கள்!
மதுரை ஒத்தக்கடை குப்பை மையம்: உயர்நீதிமன்றம் நிபந்தனை அனுமதி!
மதுரை ஒத்தக்கடை குப்பை மையம்: உயர்நீதிமன்றம் நிபந்தனை அனுமதி!
மதுரை காந்தி அருங்காட்சியகம் திறப்பு: ஆகஸ்ட் 15-க்குள் சாத்தியமா? - நீதிபதிகள் கேள்வி
மதுரை காந்தி அருங்காட்சியகம் திறப்பு: ஆகஸ்ட் 15-க்குள் சாத்தியமா? - நீதிபதிகள் கேள்வி

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்! மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கோங்க விஜய்- திமுக
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்! மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கோங்க விஜய்- திமுக
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
Embed widget