மேலும் அறிய

தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை

அரியலூரில் வங்கிக் கடன் தவணையை திரும்பி செலுத்தாத விவசாயியை, தனியார் வங்கி ஊழியர்கள் வீடு தேடிச் சென்று அச்சுறுத்தியதால், விவசாயி மன உளைச்சலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரியலூர் மாவட்டம்,  திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி என்று கிராமம் உள்ளது. இங்கு மேட்டுத் தெருவில் வசிக்கும் விவசாயி கோவிந்தராஜ்.

இவருக்கு கமலா என்ற மனைவியும், கல்லூரி படிக்கும் மகனும், 11-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். 

இவர் கடந்த ஜனவரி மாதம், ஐடிஎப்சி என்ற தனியார் வங்கியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கறவை மாட்டுக் கடனை பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் 11,958 ரூபாய் தவணை தொகையாக செலுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கோவிந்தராஜ் குடும்ப சூழல் காரணமாக கடந்த மாதம் வங்கித் தவணைத் தொகையை செலுத்த தாமதமானதாகக் கூறப்படுகிறது.

இதனால், தனியார் வங்கி வசூல் ஏஜெண்டுகள் சிலர் கோவிந்தராஜை மேட்டுத்தெருவிலுள்ள அவரது வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து, தவணைப் பணத்தைக் கேட்டு கடுமையான நெருக்கடி அளித்துள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் கோவிந்தராஜ் கடைவீதிக்கு சென்றபோது அங்கும், கடனை திரும்ப செலுத்த சொல்லி பொதுவெளியில் வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. இதனால், கோவிந்தராஜும் அவரது மனைவியும் கமலாவும் கடும் மன உளைச்சலுக்குள்ளானார்கள்.

இதையடுத்து, தவணை செலுத்த தேவையான பணத்தை புரட்டுவதற்காக கோவிந்தராஜின் மனைவி நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார்.

இந்த நேரத்தில் கோவிந்தராஜ், வங்கி ஊழியர்களால் தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை வீடியோவாக பேசிப் பதிவு செய்துவிட்டு, தனது வீட்டிற்கு அருகே இருந்த வேப்பமரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து கோவிந்தராஜின் உடலை கைப்பற்றிய திருமானூர் காவல்துறையினர், அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி ஊழியர்களின் அச்சுறுத்தலால் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரியலூர் பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு வீடியோக்கள்

தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, தாம்பரம் பகுதிகளில் நாளை (ஜூலை 17) மின்தடை!
சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, தாம்பரம் பகுதிகளில் நாளை (ஜூலை 17) மின்தடை!
டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி செய்தி! சிபில் ஸ்கோர் பார்க்காமல் கடன் வழங்கும் இந்தியன் வங்கி!
டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி செய்தி! சிபில் ஸ்கோர் பார்க்காமல் கடன் வழங்கும் இந்தியன் வங்கி!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
’’இனிமேல் லஞ்சம் வாங்கினால் எனக்கு WHATSAPP பண்ணுங்க’’நம்பர் கொடுத்த CM விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget