மேலும் அறிய

கம்பம் நகர்மன்ற திமுக தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: தோல்வி! பின்னணியில் நடந்தது என்ன?

திமுக தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி. போதியளவு கவுன்சிலர்கள் வருகை இல்லாததால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தாக ஆணையர் அறிவிப்பு.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் திமுக 24, அதிமுக 7 மற்றும் இதரர் 2 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த வனிதா நெப்போலியன், சுனேதா செல்வக்குமார் ஆகியோர் பதவி வகிக்கின்றனர். இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் முறையான வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெறுவதில்லை எனவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் நகர்மன்ற தலைவரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விரோதப் போக்கில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் துணைத் தலைவர் சுனேதா செல்வக்குமார் ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்த வேண்டும் என திமுகவைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள், அதிமுக உறுப்பினர்கள் 6 பேர் என 22 பேர் கடந்த மாதம் நகராட்சி ஆணையர், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் இன்று அக்டோபர் 9 ஆம் தேதியன்று திமுகவைச் சேர்ந்த கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், துணைத் தலைவர் சுனேதா செல்வக்குமார் ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெற்றது. இதையொட்டி உத்தமபாளையம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் ஏராளமான போலீசார் கம்பம் நகராட்சி அலுவலகத்தில் குவிக்கப்பட்டனர்.

கம்பம் நகராட்சி கூட்டரங்கில் ஆணையர் உமாசங்கர் தலைமையில், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் சையது அகமது முன்னிலையில் நடத்தப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு திமுக கவுன்சிலர்கள் 15, அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர் ஒருவர் என 19 பேர் மட்டுமே பங்கேற்றனர். ஆனால் நம்பிக்கை தீர்மானத்திற்கு கோரம் இல்லாததால் தலைவர், துணைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தாக ஆணையர் உமாசங்கர் தெரிவித்தார். அதாவது மொத்தமுள்ள 33 வார்டு உறுப்பினர்களில் நம்பிக்கை தீர்மானத்திற்கு 5க்கு 4 என்ற விகிதாச்சார அடிப்படையில் குறைந்தது 27 உறுப்பினர்கள் வருகைப் பதிவு இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் 19 பேர் மட்டும் பங்கேற்றதால் தோல்வி அடைந்தது என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கம்பம் நகர்மன்ற திமுக தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: தோல்வி! பின்னணியில் நடந்தது என்ன?

கவுன்சிலர்களை தன் வசப்படுத்தி வைத்துக்கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பங்கேற்க விடாமல் நகர்மன்ற தலைவர் தரப்பினர் முறைகேடு செய்து இன்றைய வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் மக்கள் மத்தியில் திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் தோல்வியடைந்திருப்பதாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த கவுன்சிலர்கள் தெரிவித்தனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MONTHA Cyclone: வருகிறது MONTHA புயல்; எப்போது? எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னைக்கு எப்படி?
MONTHA Cyclone: வருகிறது MONTHA புயல்; எப்போது? எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னைக்கு எப்படி?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
PM SHRI Scheme: கேரளாவில் எதிர்ப்புகளை மீறி பிஎம் ஸ்ரீ திட்டம் அமல்: தமிழ்நாடு, வங்கம்தான் பாக்கி- கல்வியில் என்ன மாற்றம்?
PM SHRI Scheme: கேரளாவில் எதிர்ப்புகளை மீறி பிஎம் ஸ்ரீ திட்டம் அமல்: தமிழ்நாடு, வங்கம்தான் பாக்கி- கல்வியில் என்ன மாற்றம்?
TN SIR ECI: ஆரம்பிக்கலாமா..! தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் - தேர்தல் ஆணையம்
TN SIR ECI: ஆரம்பிக்கலாமா..! தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் - தேர்தல் ஆணையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bihar  | ராகுலை ஓரங்கட்டிய தேஜஸ்வி கடும் நெருக்கடியில் காங்கிரஸ்! எகிறி அடிக்கும் கூட்டணிக்கட்சிகள்
Dharmapuri Collector : மழையால் இடிந்த வீடு! SPOT-க்கு விரைந்த கலெக்டர் அதிரடி நடவடிக்கை
Taliban vs Pakistan Army | ‘’ஆம்பளையா இருந்தா வாடா” ராணுவ தளபதிக்கு மிரட்டல்தாலிபன் வெளியிட்ட வீடியோ
Child dies in rainwater | தேங்கி நின்ற மழைநீர்! மூழ்கி உயிரிழந்த குழந்தை! கையில் DRESS. கதறி அழுத தாய்
தாமதமாகும் DGP நியமனம்! மத்திய அரசு கொடுத்த LIST! கடுப்பான தமிழக அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MONTHA Cyclone: வருகிறது MONTHA புயல்; எப்போது? எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னைக்கு எப்படி?
MONTHA Cyclone: வருகிறது MONTHA புயல்; எப்போது? எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னைக்கு எப்படி?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
PM SHRI Scheme: கேரளாவில் எதிர்ப்புகளை மீறி பிஎம் ஸ்ரீ திட்டம் அமல்: தமிழ்நாடு, வங்கம்தான் பாக்கி- கல்வியில் என்ன மாற்றம்?
PM SHRI Scheme: கேரளாவில் எதிர்ப்புகளை மீறி பிஎம் ஸ்ரீ திட்டம் அமல்: தமிழ்நாடு, வங்கம்தான் பாக்கி- கல்வியில் என்ன மாற்றம்?
TN SIR ECI: ஆரம்பிக்கலாமா..! தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் - தேர்தல் ஆணையம்
TN SIR ECI: ஆரம்பிக்கலாமா..! தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் - தேர்தல் ஆணையம்
TN RTE Admission: அக்.30 முதல் ஆர்டிஇ மாணவர் சேர்க்கை! யாருக்கு முன்னுரிமை? முக்கிய தேதிகள் இதோ!
TN RTE Admission: அக்.30 முதல் ஆர்டிஇ மாணவர் சேர்க்கை! யாருக்கு முன்னுரிமை? முக்கிய தேதிகள் இதோ!
China Warns America: 155% வரி; “பேச்சுவார்த்தை நடத்தி ‘தப்ப‘ திருத்திடுங்க, இல்லைன்னா..“; அமெரிக்காவை எச்சரித்த சீனா
155% வரி; “பேச்சுவார்த்தை நடத்தி ‘தப்ப‘ திருத்திடுங்க, இல்லைன்னா..“; அமெரிக்காவை எச்சரித்த சீனா
PAK-AFG ISSUE: பாகிஸ்தானை சுத்தி சுத்தி அடிக்கும் தாலிபன்கள் - வாட்டர் கட், குறுக்கே டேம் கட்ட ஆஃப்., முடிவு
PAK-AFG ISSUE: பாகிஸ்தானை சுத்தி சுத்தி அடிக்கும் தாலிபன்கள் - வாட்டர் கட், குறுக்கே டேம் கட்ட ஆஃப்., முடிவு
கேரளாவின் வறுமை ஒழிப்பு: அரசு ஏன் கணக்கெடுப்பை மறுக்கிறது? அன்புமணி ராமதாஸ் கேள்வி
கேரளாவின் வறுமை ஒழிப்பு: அரசு ஏன் கணக்கெடுப்பை மறுக்கிறது? அன்புமணி ராமதாஸ் கேள்வி
Embed widget