மேலும் அறிய

கல்லூரி மாணவி தற்கொலை.. தனியார் கல்லூரி தாளாளர், முதல்வர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தனியார் கல்லூரி தாளாளர், முதல்வர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். கூலித்தொழிலாளியான இவரது மகள் சுபாஷினி(வயது 19). இவர், நாகை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வந்தார் நேற்று முன்தினம் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் சுபாஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


கல்லூரி மாணவி தற்கொலை.. தனியார் கல்லூரி தாளாளர், முதல்வர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

கல்லூரியின் பருவ கட்டணம் செலுத்தாமல் இருந்த மாணவி சுபாஷினியை வகுப்பறையின் வெளியில் நிற்க வைத்ததால் அவமானம் அடைந்து சுபாஷினி தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர், நாகூர் போலீசில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் சந்தேக மரணம், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கல்லூரி தாளாளர், முதல்வர் மற்றும் வகுப்பு பொறுப்பாளர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் மாணவி சுபாஷினி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகை-வேளாங்கண்ணி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.


கல்லூரி மாணவி தற்கொலை.. தனியார் கல்லூரி தாளாளர், முதல்வர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

இதற்குள் சாலை மறியலில் ஈடுபட்ட சிலர் கல்லூரி வளாகத்தில் புகுந்து அங்கு நின்ற பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு மாணவியின் உடலை வாங்க மறுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அந்த கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது நண்பரை பார்த்து விட்டு வெளியில் வந்தார். அப்போது காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த பேராசிரியர் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் மயங்கி விழுந்த அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு அருகில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர். சாலையின் நடுவே பந்தல் அமைத்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள், போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர். இதன் காரணமாக இந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கல்லூரி மாணவி தற்கொலை.. தனியார் கல்லூரி தாளாளர், முதல்வர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

தற்கொலை தீர்வல்ல..
தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. அதனால், தற்கொலை எண்ணங்கள் தோன்றும்போது, உடனடியாக மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும். பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப, மனரீதியிலான கவுன்சலிங் கொடுக்கப்படும். காய்ச்சல், வயிற்று வலிக்கு மருத்தவரை சந்திப்பது போலத்தான், மனதின் ஆரோக்கியம் குன்றும்போது மனநல மருத்துவரை சந்திப்பதும். அதற்குத் தயக்கமே வேண்டாம் தூக்கியெறியுங்கள். அரசு இலவச மனநல ஆலோசனைக்கு 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தற்கொலை எண்ணத்தைக் கடக்கலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
மாஸ் என்ட்ரி கொடுத்த யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்.. உலகமே ஷாக்
மும்பையில் யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
மாஸ் என்ட்ரி கொடுத்த யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்.. உலகமே ஷாக்
மும்பையில் யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
Embed widget