மேலும் அறிய

சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய ஆந்திர பக்தர்களின் கார் விபத்து: தந்தை, மகன் உயிரிழப்பு! பெரியகுளத்தில் சோகம்.

சபரிமலையில் தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பிய ஆந்திர  பக்தர்களின் கார்  பெரியகுளம் அருகே விபத்து . தந்தை மகன் என இருவர் உயிரிழப்பு.

தமிழக-கேரள எல்லையை இணைக்கும் மாவட்டங்களில் முக்கியமாக பார்க்கப்படுவது தேனி மாவட்டம். கேரள மாநிலத்திற்கு செல்வதற்கு தேனி மாவட்டத்தில் இருந்து மூன்று மலைச்சாலை வழிகள் உள்ளது. போடி நாயக்கனூரில் இருந்து போடி மெட்டு வழியாகவும், கம்பத்தில் இருந்து  கம்பம் மெட்டு மலை வழியாகவும் குமுளி மலை வழி சாலை வழியாகவும் கேரளாவை அடைய முடியும்.


சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய ஆந்திர பக்தர்களின் கார் விபத்து: தந்தை, மகன் உயிரிழப்பு! பெரியகுளத்தில் சோகம்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு அதிகப்படியான வாகனங்கள் தேனி மாவட்டம் வழியாவே செல்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் அடுத்த மாதம்  மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி தேனி மாவட்டம் கூடலூர் ,குமுளி வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் சென்று வந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ஆந்திரா மாநிலம் சக்தி வேமூர்தடா அருகே உள்ள வாகைபாளையத்தைச் சேர்ந்தவர் நரேஷ்குர்லா(32), இவர் தனது தந்தை வேணு(55) மகன் சாதுர்யா(9). மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முனி தேஜா(28) ஆகிய நான்கு பேரும் 2நாட்களுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு  காரில்  சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு அனைவரும் இன்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை முனிதேஜா(28) என்பவர் ஓட்டினார். 


சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய ஆந்திர பக்தர்களின் கார் விபத்து: தந்தை, மகன் உயிரிழப்பு! பெரியகுளத்தில் சோகம்.

இந்நிலையில் இன்று மாலை பெரியகுளம்  அருகே உள்ள வடுகபட்டி புறவழிச்சாலை அருகே வந்த போது நிலைதடுமாறிய கார் சாலை ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் கார் மோதி  பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதே இடத்தில் நரேஷ்குர்லா பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்றவர்கள் 108ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 
ஆனால் செல்லும் வழியிலே வேணு உயிரிழந்தார். மேலும் காயமடைந்த முனிதேஜா தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தற்போது ஐயப்பன் கோயில் மற்றும் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து கோயிலுக்கு சென்று வருவதால் புறவழிச் சாலையில் அதிக அளவில் வாகனங்கள் மற்றும் பக்தர்கள் சென்று வருவதாலும் நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலையில் இருபுறங்களும் விபத்து ஏற்படாமல் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையும் வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Lemon Pepper Chicken: வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Embed widget