கேரளாவில் சிக்கிய பிரித்தானிய போர் விமானம்: பழுது நீக்க முடியாமல் போனதால் பரபரப்பு! F-35B விமானம் என்ன ஆகும்?
இன்று (ஜூலை 5) 40 உறுப்பினர்களைக் கொண்ட இங்கிலாந்து பொறியாளர்கள் குழு சிறப்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் வரவுள்ளது. போர்விமானத்தை கொண்டு செல்ல சி-17 குளோப்மாஸ்டர் III விமானம் பயன்படுத்தப்படுகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த ஜூன் 14-ஆம் திகதி அவசர தரையிறக்கம் செய்த பிரிட்டன் கடற்படை போர் F-35B போர் விமானம் இன்னும் சீர் செய்யப்படாத நிலையில் இருந்தாலும், பிரிட்டிஷ் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 15 புதிய F-35B போர் விமானங்களை வாங்குவதாக அறிவித்துள்ளது. பிரிட்டன் அரசின் புதிய திட்டத்தின் முதற்கட்டத்தில் 12 F-35A விமானங்கள் வாங்கப்படவுள்ளன.
இது NATO-வின் Dual Capable Aircraft (DCA) Nuclear Mission-ல் பங்கு பெறும் முக்கியமான முன்னேற்றமாகும். இரண்டாம் கட்டத்தில், 12 F-35A மற்றும் 15 F-35B வகை விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. பிரிட்டனின் பூரண திட்டத்தின்படி, மொத்தம் 138 F-35 விமானங்களை வாங்கும் திட்டத்தை நிர்வகிக்கிறது. இது பிரிட்டனின் அணு பாதுகாப்பு நிலைப்பாட்டை இதுவரை இல்லாத அளவுக்கு வலுப்படுத்தும் முயற்சியாகும். இந்நிலையில், கன்சர்வேட்டிவ் காட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் Ben Obese-Jecty, கேரளாவில் நிற்கும் விமானம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சர் Luke Pollard, விமானம் RAF படையினரால் 24 மணி நேரமும் பாதுகாக்கப்படுகிறது என்றும், பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விமானம் முன்னதாக இந்திய மற்றும் பிரிட்டனின் கடற்படைகளின் கூட்டு கடல் பயிற்சி (Joint Naval Drill) நிகழ்வில் பங்கேற்றபோது அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரிட்டனின் பொறியாளர்கள் நிபுணர்கள் திருவனந்தபுரத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
கடந்த ஜூன் 14-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் கடற்படை போர் விமானமான F-35B பழுதுபார்க்க முடியாத நிலையில் இருப்பதால், அந்த விமானத்தின் பாகங்களை தனித்தனியாக பிரித்து இங்கிலாந்துக்கு எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 14ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35B ஸ்டெல்த் ஜெட் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. எனவே அந்த போர் விமானத்தை தனித்தனியாக பிரித்து, ராணுவ சரக்கு விமானம் மூலமாக இங்கிலாந்துக்கு மீண்டும் கொண்டு சென்று பழுது நீக்க திட்டமிடப்பட்டது. இந்த போர் விமானத்தை பழுது நீக்குவதற்காக ஜூலை 2-ம் தேதி இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு கேரளா வர திட்டமிடப்பட்டது, ஆனால் அவர்களின் வருகை ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று (ஜூலை 5) 40 உறுப்பினர்களைக் கொண்ட இங்கிலாந்து பொறியாளர்கள் குழு சிறப்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் வரவுள்ளது. பழுது நீக்குவதற்காக பிரிக்கப்படும் F-35B போர்விமானத்தை கொண்டு செல்ல சி-17 குளோப்மாஸ்டர் III விமானம் பயன்படுத்தப்படுகிறது. குளோப்மாஸ்டர் என்பது இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்படும் ஆற்றல் வாய்ந்த கனரக சரக்கு விமானமாகும். இது சுமார் 77 டன் எடையை சுமக்கும் திறன் கொண்டது. ஆனால், F-35B விமானம் 14 மீட்டர் நீளம் கொண்டது, அதன் இறக்கைகள் சுமார் 11 மீட்டர் நீளம் கொண்டவை. எனவே இந்த போர் விமானத்தை முழுமையாக குளோப்மாஸ்டரில் ஏற்ற முடியாது. இதனால் F-35B விமானத்தின் இறக்கைகளை பிரித்து குளோப்மாஸ்டர் மூலமாக கொண்டுசெல்லவுள்ளனர். இதற்காக போர் விமானத்தை பிரித்து, பொருத்துவதில் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர் குழு திருவனந்தபுரம் வரவுள்ளது.





















