மேலும் அறிய

Abp Nadu Impact: “கொண்டுவரும் குடிநீர்பத்தவில்லை” - பள்ளி மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சமூக ஆர்வலர்கள்

நாங்கள் வீட்டில் இருந்து அவசியம் தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்ற சிரமம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று மாணவர்கள் நெகிழ்ச்சி.

மதுரை திருநகர் பகுதியில் செயல்படுகிறது அமலா கான்வென்ட் எனும் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி. இங்கு ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிகளவு பயின்று வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டுவரும் குடி தண்ணீர்  போதுமான அளவில்லை என தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து இந்த பிரச்னை குறித்து மதுரையில் பல்வேறு சமூக பணிகளை செய்துவரும் பசியாற்று நண்பர்கள் டிரஸ்ட் குழுவிற்கு தகவல் அளித். இந்நிலையில் பசியாற்று நண்பர்கள் டிரஸ்ட் அமைப்பு பள்ளியில் கள ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 100 லிட்டர் அளவு கொண்ட ஆர்.ஓ., வாட்டர் பிளாண்டை அமைத்துக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் ஒரு நாளைக்கு 600 லிட்டர் வரை தண்ணீர் பெற்றுக் கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தனர். பசியாற்று நண்பர்கள் டிரஸ்ட் அமைப்பு. 6 வருடமாக மதுரையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே பசி எனும் நோயை போக்க வேண்டும் என தொடர்ந்து மதுரையில் பல்வேறு இடங்களில் வீடற்ற சாலையோர உறவுகளுக்கு  உணவு வழங்கி வருகின்றனர். தங்களது வாட்சப் குழுவில் உள்ள நண்பர்களிடம் கிடைக்கும் சிறிய தொகையை சிறிது சிறிதாக சேகரித்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் போர்கால அடிப்படையில் மதுரை மக்களுக்கு உதவி செய்தனர். தற்போது தொடர்ந்து கல்வி சார்ந்த உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களின் தண்ணீர் தாகத்தை தணிக்கும் வகையில் 42 ஆயிரம் மதிப்பில் ஆர்.ஓ.பிளாண்ட் அமைத்துக் கொடுத்தனர். மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர் - ஆசிரியர்கள் இடையேவும் வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Abp Nadu Impact: “கொண்டுவரும் குடிநீர்பத்தவில்லை” - பள்ளி மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சமூக ஆர்வலர்கள்
 
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், “தினமும் பள்ளிக்கு அரை லிட்டர் தண்ணீர் தான் கொண்டுவர முடியும். அதிகபட்சம் ஒரு லிட்டர் வரை தண்ணீர் கொண்டுவர முடிந்தது. இதனால் மாலை நேரங்களில் கொண்டுவரும் தண்ணீர் தீர்ந்து அதிகளவு தாகம் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் சிரமப்பட்டோம். இந்த நிலையில் பசியாற்று நண்பர்கள் டிரஸ்ட் உதவி எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதன் மூலம் நாங்கள் வீட்டில் இருந்து அவசியம் தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்ற சிரமம் தவிர்க்கப்பட்டுள்ளது. எங்களின் பள்ளி சார்பாகவும் மாணவர்கள் சார்பாகவும், பசியாற்றுகள் குழுவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Savukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனாThanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
IND vs BAN Kanpur Test:வங்கதேச அணிக்கு எதிரான  டெஸ்ட் - இன்னும் 1 விக்கெட்  தேவை! சாதனையை எட்டுவாரா ஜடேஜா?
IND vs BAN Kanpur Test:வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் - இன்னும் 1 விக்கெட் தேவை! சாதனையை எட்டுவாரா ஜடேஜா?
Embed widget