மேலும் அறிய
ஆதார் சேவை மையங்களில் மக்கள் கூட்டம்: தென் மாவட்டங்களில் கூடுதல் ஆதார் மையங்கள் அமைக்கப்படுமா?
காலை 5 மணி முதல் ஆதார் மையத்தின் முன்பாக காத்துக்கிடக்கும் பொதுமக்கள் - மாவட்ட அளவில் உள்ள ஆதார் சேவை மையங்களை மேம்படுத்த கோரிக்கை.

ஆதார் மையத்தில் ஏற்பட்ட கூட்டம்
Source : whatsapp
மதுரையிலுள்ள மத்திய அரசின் ஆதார் சேவை மையத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்.
ஆதார் மையம்
தென் மாவட்டத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை மாநகர் கே.கே நகர் பகுதியில் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆதார் சேவை மையம் செயல்பட்டுவருகிறது. இங்கு மதுரை மட்டுமின்றி தேனி, திண்டுக்கல் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் ஆதார் பிரச்னை தொடர்பாக ஆதார் பெயர் திருத்தம் மற்றும் அப்டேட் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகளுக்கான தேர்வு தொடங்க உள்ள நிலையில் ஹால்டிக்கெட்டுக்களுக்கான ஆவண பணிகள் தொடங்கியுள்ளதால் மாணவ மாணவிகளுக்கான ஆதாரில் திருத்தம் மற்றும் பெயர் முகவரி திருத்தம் உள்ளிட்டவைகள் செய்வதற்கு தென்மாவட்டங்களில் போதிய அளவிற்கான ஆதார் மையம் இல்லாத நிலையில் மதுரைக்கு வருகை தருகின்றனர்.
அதிகாலை முதல் காத்திருக்கும் மக்கள்
மதுரையில் மட்டுமே மத்திய அரசின் கீழுள்ள ஆதார் மையம் உள்ளது இதன் காரணமாக தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது ஆதார் சேவைகளை பெறுவதற்காக மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஆதார் மையத்தில் குவிந்து வருகின்றனர். இன்று விடுமுறை நாளிலும் ஆதார் மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தேனி திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலாகவே ஆதார் சேவை மையத்தில் காலை 5 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்
ஒவ்வொரு பகுதிகளிலும் சிறிய அளவிற்கான மத்திய அரசின் ஆதார் சேவை மையம் வேண்டும்
இது குறித்து பேசிய பொதுமக்கள் தங்கள் ஊர்களில் ஆதார் சேவை மையம் இல்லாத நிலையில் இது போன்று மதுரைக்கு சென்றால் மட்டும் தான் சரி செய்ய முடியும் என கூறுகிறார்கள். அதனால் அதிகாலை 3 மணிக்கு எல்லாம் எழுந்து ஆதார் மையத்திற்கு வந்திருக்கிறோம் . 9.30 மணிக்கு ஆதார் மையம் திறப்பார்கள் ஆனால் வேறு வழியில்லாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதார் திருத்த சேவைகளை ஈடுபட வேண்டியது உள்ளது என தெரிவித்தனர். மதுரையில் வைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் ஆதார் சேவை மையம் போல தென் மாவட்டங்களில் ஒவ்வொரு, பகுதிகளிலும் சிறிய அளவிற்கான மத்திய அரசின் ஆதார் சேவை மையத்தை திறக்க வேண்டும்” என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கூட்டத்தால் ஏற்படும் பிரச்னை
மேலும் மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் எதிரில் இருக்கக்கூடிய ஆதார் மையத்தில் நாளொன்றுக்கு நூறு பேர் அமரும் அளவிற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தரக்கூடிய சூழலில், அதே பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்குள்ள கடைகளில் முன்பாக வரிசையில் காத்திருப்பதால் கடைக்கு வரக்கூடியவர்களுக்கும், ஆதார் சேவை மையத்திற்காக காத்திருக்க கூடியவர்களுக்கும் இடையே அவ்வப்போது சிறிய சிறிய பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















