மதுரை : இலங்கை பொருளாதார சிக்கல் : மக்களுக்கு உதவ உசிலம்பட்டி பள்ளி மாணவர்கள் சார்பில் 5 ஆயிரம் உதவி !
பொருளாதார நெருக்கடியால் வாடும் மக்களுக்கு உசிலம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மழலைகள் ஆசிரியர்களின் உதவியுடன் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தனர்.

”இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான ஒன்றிய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வாடும் மக்களுக்கு உசிலம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மழலைகள் ஆசிரியர்களின் உதவியுடன் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தனர்.#madurai | #SriLankaEconomicCrisis | #SriLankaProtests @SRajaJourno pic.twitter.com/TCxsIFFNOS
— Arunchinna (@iamarunchinna) May 5, 2022

Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















