மேலும் அறிய

பல மாதங்களாக வாடகை பாக்கி.. படிக்கட்டுகளை இடித்த வீட்டு உரிமையாளர்.. காஞ்சிபுரத்தில் விநோதம்..

Kanchipuram News : " 100 அவசர எண்ணில் புகார் தெரிவித்த நிலையில் ,  தீயணைப்புத்துறை மற்றும் காஞ்சிபுரம்  தாலுக்கா காவல்துறையினர் இணைந்து மீட்டனர் "

காஞ்சிபுரம் வானவில் நகர் பகுதியில் வீட்டு வாடகை முறையாக செலுத்தாததால் வீட்டு உரிமையாளர் மாடிப்படிகளை இடித்ததால்,  பல மணி நேரம் வீட்டில் முடங்கிய நோயாளி குடும்பத்தினர். நூறு அவசர எண்ணில் புகார் தெரிவித்த நிலையில், தீயணைப்புத்துறை மற்றும் காஞ்சிபுரம்  தாலுக்கா காவல்துறையினர் இணைந்து மீட்டனர்.

திடீர் உடல்நல குறைவு

காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் ஆப்செட் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வானவில் நகர் பகுதியில் சொந்தமான வீடு உள்ளது. இங்கு மேல் மாடியில் வேணுகோபால் என்பவர் தனது மனைவி லீலா, வேணுகோபால் தம்பி பாபு மற்றும் மகள் மகாலட்சுமி, அவரது இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வேணுகோபால் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார்.


பல மாதங்களாக வாடகை பாக்கி.. படிக்கட்டுகளை இடித்த வீட்டு உரிமையாளர்.. காஞ்சிபுரத்தில் விநோதம்..

முறையாக வாடகை செலுத்தாததால் இவரை குடியிருப்பில் இருந்து காலி செய்ய வீட்டு உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதனிடையில் வழக்கறிஞர் உதவியுடன் வீட்டின் உரிமையாளரிடம் பேசி கால அவகாசம் வாங்கிய நிலையில் கடந்த ஆறு மாத காலமாக வாடகை செலுத்தவில்லை. பலமுறை கேட்டும் வீடு காலி செய்ய பலமுறை கேட்டும் வீடு காலி செய்ய மறுத்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் கட்டுமான உதவியாளர்  10 நபர்களுடன் வீட்டின் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளை இடித்து இணைப்பை துண்டித்துள்ளார் உரிமையாளர்


பல மாதங்களாக வாடகை பாக்கி.. படிக்கட்டுகளை இடித்த வீட்டு உரிமையாளர்.. காஞ்சிபுரத்தில் விநோதம்..

காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை

இதைக் கண்டு அதிர்ச்சடைந்த குடியிருப்புவாசிகள் காவல்துறையின் அவசர உதவியான நூறுக்கு அழைத்து புகார் தெரிவித்ததின் பேரில், காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீட்டில் உள்ள நபர்களை பாதுகாப்பாக அழைத்து வர காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். 

வீட்டை விட்டு வெளியேற குடும்பத்தினர் மறுத்து வருவதால் காவல்துறையினிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது . வாடகை செலுத்தாததால் உரிமையாளர் வீட்டின் மாடிப்படி இடித்து விட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


பல மாதங்களாக வாடகை பாக்கி.. படிக்கட்டுகளை இடித்த வீட்டு உரிமையாளர்.. காஞ்சிபுரத்தில் விநோதம்..

இது  குறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியை கவனிக்க அதிகமாக செலவழித்த நிலையில் விரைவாக தந்து விடுவதாக கூறிய நிலையில், உரிமையாளர் இது போன்ற அராஜக செயல் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.

தற்போது குடிநீர் கூட குடிக்க இயலாத நிலையில், வீட்டில் முடங்கி கிடப்பதாகவும் பள்ளி செல்லும் மாணவர்கள் கூட பள்ளிக்கு செல்லாமல் காத்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில் ஏற்கனவே முறையாக வாடகை செலுத்தி வந்ததாகவும், தற்பொழுது வாடகை செலுத்தாததால் இதுபோன்று செய்துவிட்டு சென்றதாகவும் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
Bangladesh Protest Violence: வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
Embed widget