காஞ்சிபுரம்: நாளை மின் தடை! உங்க ஏரியா இருக்கா? பராமரிப்பு பணி காரணமாக 7 மணி நேரம் பவர் கட்!
Kanchipuram Power Shutdown Tommorow: "காஞ்சிபுரத்தில் நாளை (17-09-2025) முக்கிய இடங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது"

காஞ்சிபுரம் மாவட்டம் நீர்வள்ளூர் துணை மின் நிலையத்தில் மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை அறிவிப்பு.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின்தடை
நீர்வள்ளுர் 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் 17.09.2025 அன்று புதன்கிழமை காலை 09:00 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மின்தடை மேற்கொள்ள பகுதிகளில் என்ன ?
அந்த நேரத்தில் நீர்வள்ளுர் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகள் சின்னையன் சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், நீர்வள்ளுர், தொடுர், மேல்மதுரமங்களம், சிங்கில்பாடி, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்களம், செல்வழிமங்களம், சிங்காடிவாக்கம், சின்னிவாக்கம், மருதம் ஆகிய கிராமங்களிலும், பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
காரை, சிறுவாக்கம், ஆண்டிசிறுவள்ளுர், நாகப்பட்டு, ஏகனாபுரம், கொட்டவாக்கம், எடையார்பாளையம், செல்லம்பட்டிடை, கோட்டூர், எலுமயன் கோட்டூர், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், 144 தண்டலம், நெல்வாய் மற்றும் மேல்படுவூர் ஆகிய கிராமங்களிலும் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
17.09.2025 அன்று புதன்கிழமை காலை 09:00 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்; காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம்
காலை 09.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை மின் தடை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















