இந்தியாவில் முதல் முறை.. செல்போனுக்கு NO.. காஞ்சி காமாட்சி கோயிலில் ஆட்டோமேட்டிக் லாக்கர்
Kanchipuram Kamakshi Amman Temple: " காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் செல்போனில் கோயிலுக்குள் கொண்டு செல்ல முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது "

இந்தியாவிலேயே முதல் முறையாக தானிய செல்போன் மற்றும் உடமைகள் லாக்கர் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு, இனி வரும் காலங்களில் பக்தர்கள் செல்போனில் கோயிலுக்குள் கொண்டு செல்ல முற்றிலுமாக தடை என சங்கர மடம் மேலாளர் சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் - Kanchipuram Kamakshi Amman Temple
காஞ்சிபுரம் கோயில் நகரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் பல பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளது. காஞ்சிபுரத்திற்கு என தனி அடையாளத்தை கொடுக்கின்ற கோயிலாக, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் இருந்து வருகிறது. காமாட்சி என்றால் கருணை நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை மனம் உருகி வேண்டினால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தினமும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான வருகை புரிகின்றனர்.
செல்போனுக்கு தடை
இந்தநிலையில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அபிஷேகம், பூஜை ஆகியவற்றை செல்போனில் பதிவு செய்வதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது ஆகம விதிகளுக்கு முரணானது. எனவே கோயிலுக்குள் செல்போன் கொண்டுவர தடை விதிக்க வேண்டும் என்று சில பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செல்போனுக்கு தடை சுற்றறிக்கை
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள், அர்ச்சகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பும்படி அறநிலையத்துறை கமிஷனருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.
தானியங்கி லாக்கர்
காமாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய கோபுர வாசலில், 300 செல்போன் வைக்கும் வகையில் தானியங்கி லாக்கர் மற்றும் பெட்டகம் வைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு வருகிறது. தடையை மீறினால் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும் என காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சங்கரமட மேலாளர் சுந்தரேசன் ஐயர் தெரிவித்துள்ளார். மேலும் தானியங்கி லாக்கர் தனியார் நிறுவனத்தின் மூலம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தானியங்கி லாக்கர்கள்
இந்த தானியங்கி லாக்கர் செல்போன் எண் உடன் ஊழியர்கள் உதவி இல்லாமல் தானாக பக்தர்கள் நேரடியாக சென்று செல்போன் எண்ணையும் பாஸ்வேர்ட் செலுத்தி அவர்களுடைய செல்போனை தானாக வைத்துக் கொள்ளும் வசதி மேற்கொள்ளப்பட்டு இன்று பக்தர்கள் பயன்பாட்டிற்காக சங்கர மேடம் மேலாளர் சுந்தரேசன் ஐயர் திறந்து வைத்தார்.
செல்போன் லாக்கர் ரூ.10 மற்றும் உடமைகள் லாக்கர் பத்து ரூபாயிலிருந்து 45 ரூபாய் வரை குறைந்த கட்டணம் பெறப்பட்டு வருகிறது. கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்வதற்கு தானியங்கி லாக்கர்களை திறப்பதன் மூலம் பக்தர்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக கோயில் ஒன்றில், தானியங்கி லாக்கர் மூலம் செல்போன் வைக்கும் இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்து உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















