மேலும் அறிய

ஒருபுறம் கண்டனம் போராட்டம்.. மறுபுறம் சாலை மறியல்.. அதிமுகவினரால் பரபரத்த காஞ்சிபுரம் 

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கண்டனம் முழக்க போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 58 பேர் உயிரிழந்த நிலையில் திமுக அரசை கண்டித்து பதவி விலக வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் அதிமுகவினர் கருப்பு பேட்ஜ், கருப்பு உடை அணிந்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி விவகாரம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 58 பேர் உயிரிழந்த நிலையில் பலர் சிகிச்சையில் உள்ளனர். அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலைசருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

 

கண்டனம் முழக்கம்

இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் நடைபெற்றது. அதிமுகவினர் கருப்பு பேட்ஜ், கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டு கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று  முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்து பதவி விலக கோரியும், தமிழக அரசுக்கு எதிராகவும், கட்டுபடுத்த தவறிய முதலமைச்சரை கண்டித்து எதிராக கோஷங்களை எழுப்பியவாறு கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தின் பொழுது திமுக விற்கும் மற்றும் தமிழ்நாடு அரசிற்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாட்டு அரசுக்கு தெரிந்து  பகுதியில், கள்ளச்சாரம் வியாபாரம் நடைபெற்று வந்ததாகவும், காவல்துறையினருக்கு அது குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை எனவும் புகார் தெரிவித்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர் ‌.




சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் 



இன்று நடைபெற்ற அதிமுகவின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அதிமுகவின் ஐடி - விங் பிரிவினர் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஒருபுறம் கண்டனம் முழுக்க போராட்டம் , மறுபுறம் சாலை மறியல் போராட்டம் ஆகியவை நடைபெற்றதால் காஞ்சிபுரம் நகரம் பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi by election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
Stock Market: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!
பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 அதிகாரிகளை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 அதிகாரிகளை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi by election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
Stock Market: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!
பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 அதிகாரிகளை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 அதிகாரிகளை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Kamalhaasan:
Kamalhaasan: "கல்கி படத்திற்கு ஓகே சொல்ல ஒன்றரை வருடம் யோசித்த கமல்" இதுதான் காரணம்!
TN Headlines:அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம், கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இதுவரை இன்று!
TN Headlines: அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம், கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இதுவரை இன்று!
தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
Embed widget