மேலும் அறிய

"என்ன செய்றதுன்னு தெரியல, பத்ம ஶ்ரீ விருத திருப்பி தந்துடறேன்" மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உருக்கம்

பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தனக்கு அளிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்த வந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் மீது நடிவடிக்கை எடுக்கக் கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் மேற்கொண்ட போராட்டம் பெரும் அதிர்வலைகளை கிளப்பின.

பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் சிங்:

பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், வினேஷ் போகட் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள், இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தினார். பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷன் சிங், அவரது குடும்ப உறுப்பினர் யாரும் மல்யுத்த கூட்டமைப்பில் எந்த பதவியையும் வகிக்கக் கூடாது என்றும் மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தினர்.

பெரும் அழுத்தத்தை தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் சிங் விலகினார். இப்படிப்பட்ட சூழலில், மல்யுத்த கூட்டமைப்பின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங் வெற்றிபெற்றார்.

மல்யுத்த வீரர்களின் ஆதரவோடு தேர்தலில் நின்ற மல்யுத்த வீராங்கனை அனிதா ஷியோரன் தோல்வி அடைந்தார். இவர், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.

பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிக்கும் பஜ்ரங் புனியா:

இந்த நிலையில், பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தனக்கு அளிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "நீங்கள் பல வேலைகளில் பிஸியாக இருப்பீர்கள். ஆனால், நாட்டின் மல்யுத்த வீரர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை தெரிவிக்கும் விதமாக உங்களின் கவனத்தை ஈர்க்க இந்த கடிதத்தை எழுதுகிறேன். பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாட்டின் மல்யுத்த வீராங்கனைகள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்தனர் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நானும் அவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டேன். அரசு கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், மூன்று மாதங்களுக்குப் பிறகும், பிரிஜ் பூஷனுக்கு எதிராக எஃப்ஐஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, டெல்லி காவல்துறை குறைந்தபட்சம் அவருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் மீண்டும் ஏப்ரல் மாதம் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டோம். ஜனவரி மாதம், 19 பேர் புகார் அளித்தனர். ஆனால், ஏப்ரல் மாதத்திற்குள் அந்த எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது. பிரிஜ் பூஷன் தனது செல்வாக்கை பயன்படுத்தி மற்ற 12 மல்யுத்த வீராங்கனைகளை போராட்டத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினார் என்பது இதன்மூலம் தெரிய வந்துள்ளது.

"இரவு முழுவதும் கண்ணீர் சிந்தினோம்"

எங்களின் போராட்டம் 40 நாட்கள் நீடித்தது. அந்த சமயத்தில், எங்களுக்கு நிறைய அழுத்தம் தரப்பட்டது. எங்களின் போராட்ட களம் சூரையாடப்பட்டது. மேலும், நாங்கள் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பதக்கங்களை கங்கையில் போட சென்றோம்.

அப்போது, விவசாய சங்க தலைவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் எங்களை தடுத்து நிறுத்தினர். அந்த நேரத்தில் உங்கள் அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சர் எங்களை அழைத்து நீதி நிலைநாட்டப்படும் என்று உறுதி அளித்தார். நாங்கள் மத்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்தோம். அவர் எங்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்தார். அதனால், எங்கள் போராட்டத்தை கைவிட்டோம்.

ஆனால், நேற்று நடந்த மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலில், கூட்டமைப்பு மீண்டும் பிரிஜ் பூஷனின் கீழ் வந்தது. எப்பொழுதும் போல் மல்யுத்த கூட்டமைப்பில் செல்வாக்கு செலுத்துவேன் என்று அவரே கூறினார். பெரும் மன அழுத்தத்தில், மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாக்சி மாலிக் அறிவித்தார்.

இரவு முழுவதும் கண்ணீர் சிந்தினோம். என்ன செய்வது, எங்கு செல்வது என்று எங்களுக்குப் புரியவில்லை. அரசாங்கம் எங்களுக்கு நிறைய கொடுத்துள்ளது. 2019ஆம் ஆண்டு, எனக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. அர்ஜுனா, கேல் ரத்னா விருதும் பெற்றேன். இந்த விருதுகளைப் பெற்றபோது, ​​நான் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தேன். ஆனால், இன்று சோகத்தின் உச்சியில் இருக்கிறேன். ஒரு மல்யுத்த வீராங்கனை, தனக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி விளையாட்டிலிருந்து விலகியதே அதற்கு காரணம்.

விருது பெற்ற மல்யுத்த வீரர்களான எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நமது பெண் மல்யுத்த வீரர்கள் அவமதிக்கப்படும் போது பத்மஸ்ரீ விருது பெற்றவனாக என்னால் வாழ முடியாது. எனவே இந்த விருதை உங்களிடமே திருப்பித் தருகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget