மேலும் அறிய

"என்ன செய்றதுன்னு தெரியல, பத்ம ஶ்ரீ விருத திருப்பி தந்துடறேன்" மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உருக்கம்

பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தனக்கு அளிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்த வந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் மீது நடிவடிக்கை எடுக்கக் கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் மேற்கொண்ட போராட்டம் பெரும் அதிர்வலைகளை கிளப்பின.

பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் சிங்:

பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், வினேஷ் போகட் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள், இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தினார். பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷன் சிங், அவரது குடும்ப உறுப்பினர் யாரும் மல்யுத்த கூட்டமைப்பில் எந்த பதவியையும் வகிக்கக் கூடாது என்றும் மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தினர்.

பெரும் அழுத்தத்தை தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் சிங் விலகினார். இப்படிப்பட்ட சூழலில், மல்யுத்த கூட்டமைப்பின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங் வெற்றிபெற்றார்.

மல்யுத்த வீரர்களின் ஆதரவோடு தேர்தலில் நின்ற மல்யுத்த வீராங்கனை அனிதா ஷியோரன் தோல்வி அடைந்தார். இவர், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.

பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிக்கும் பஜ்ரங் புனியா:

இந்த நிலையில், பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தனக்கு அளிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "நீங்கள் பல வேலைகளில் பிஸியாக இருப்பீர்கள். ஆனால், நாட்டின் மல்யுத்த வீரர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை தெரிவிக்கும் விதமாக உங்களின் கவனத்தை ஈர்க்க இந்த கடிதத்தை எழுதுகிறேன். பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாட்டின் மல்யுத்த வீராங்கனைகள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்தனர் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நானும் அவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டேன். அரசு கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், மூன்று மாதங்களுக்குப் பிறகும், பிரிஜ் பூஷனுக்கு எதிராக எஃப்ஐஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, டெல்லி காவல்துறை குறைந்தபட்சம் அவருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் மீண்டும் ஏப்ரல் மாதம் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டோம். ஜனவரி மாதம், 19 பேர் புகார் அளித்தனர். ஆனால், ஏப்ரல் மாதத்திற்குள் அந்த எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது. பிரிஜ் பூஷன் தனது செல்வாக்கை பயன்படுத்தி மற்ற 12 மல்யுத்த வீராங்கனைகளை போராட்டத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினார் என்பது இதன்மூலம் தெரிய வந்துள்ளது.

"இரவு முழுவதும் கண்ணீர் சிந்தினோம்"

எங்களின் போராட்டம் 40 நாட்கள் நீடித்தது. அந்த சமயத்தில், எங்களுக்கு நிறைய அழுத்தம் தரப்பட்டது. எங்களின் போராட்ட களம் சூரையாடப்பட்டது. மேலும், நாங்கள் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பதக்கங்களை கங்கையில் போட சென்றோம்.

அப்போது, விவசாய சங்க தலைவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் எங்களை தடுத்து நிறுத்தினர். அந்த நேரத்தில் உங்கள் அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சர் எங்களை அழைத்து நீதி நிலைநாட்டப்படும் என்று உறுதி அளித்தார். நாங்கள் மத்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்தோம். அவர் எங்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்தார். அதனால், எங்கள் போராட்டத்தை கைவிட்டோம்.

ஆனால், நேற்று நடந்த மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலில், கூட்டமைப்பு மீண்டும் பிரிஜ் பூஷனின் கீழ் வந்தது. எப்பொழுதும் போல் மல்யுத்த கூட்டமைப்பில் செல்வாக்கு செலுத்துவேன் என்று அவரே கூறினார். பெரும் மன அழுத்தத்தில், மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாக்சி மாலிக் அறிவித்தார்.

இரவு முழுவதும் கண்ணீர் சிந்தினோம். என்ன செய்வது, எங்கு செல்வது என்று எங்களுக்குப் புரியவில்லை. அரசாங்கம் எங்களுக்கு நிறைய கொடுத்துள்ளது. 2019ஆம் ஆண்டு, எனக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. அர்ஜுனா, கேல் ரத்னா விருதும் பெற்றேன். இந்த விருதுகளைப் பெற்றபோது, ​​நான் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தேன். ஆனால், இன்று சோகத்தின் உச்சியில் இருக்கிறேன். ஒரு மல்யுத்த வீராங்கனை, தனக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி விளையாட்டிலிருந்து விலகியதே அதற்கு காரணம்.

விருது பெற்ற மல்யுத்த வீரர்களான எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நமது பெண் மல்யுத்த வீரர்கள் அவமதிக்கப்படும் போது பத்மஸ்ரீ விருது பெற்றவனாக என்னால் வாழ முடியாது. எனவே இந்த விருதை உங்களிடமே திருப்பித் தருகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ENG Semi Final LIVE Score: மீண்டும் வந்த மழை.. ஆட்டம் பாதியில் நிறுத்தம்!
IND vs ENG Semi Final LIVE Score: மீண்டும் வந்த மழை.. ஆட்டம் பாதியில் நிறுத்தம்!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG Semi Final LIVE Score: மீண்டும் வந்த மழை.. ஆட்டம் பாதியில் நிறுத்தம்!
IND vs ENG Semi Final LIVE Score: மீண்டும் வந்த மழை.. ஆட்டம் பாதியில் நிறுத்தம்!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
Embed widget