மேலும் அறிய

Rahul Gandhi: மகளிர் இடஒதுக்கீடு - சாதி வாரி கணக்கெடுப்பு, ஒபிசி உள் ஒதுக்கீடு கட்டாயம் - ராகுல் காந்தி பேச்சு

மகளிர் இடஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு கட்டாயம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

மகளிர் இடஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு கட்டாயம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

சட்டம் அமலுக்கு வருமா?

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா நல்லது, அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதனை நிறைவேற்றாததற்கு வருந்துகிறேன். ஆனால், தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை திசை திருப்பும் தந்திரமாக பாஜக பயன்படுத்துகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரயறை முடிந்த பின்னரே மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு கட்டுப்பாடுகளையும் உடனே நீக்கி சட்டத்தை அமல்படுத்த வேண்டும். உண்மை என்னவென்றால், இடஒதுக்கீட்டை இன்றே நடைமுறைப்படுத்த முடியும். இது சிக்கலான விஷயம் இல்லை, ஆனால் அரசு அதை செய்ய விரும்பவில்லை. மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டம் செயல்படுத்தப்படுமா என்பது யாருக்கும் தெரியாது.

அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும்:

மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஏற்கனவே நடத்தப்பட்ட  சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்.  நாட்டின் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. மத்திய அரசில்  உள்ள 90 துறை செயலாளர்களில்  3 பேர் மட்டுமே ஒ.பி,.சி. பிரிவை சேர்ந்தவர்கள். மத்திய அரசின் ஒபிசி பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் எத்தனை பேர் உள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய பாஜக அரசு மறுக்கிறது.

புறக்கணிக்கப்படும் ஒபிசி மக்கள்:

நாட்டின் ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பில் 5 சதவிகித நிதி மீது தான்  ஒபிசி அதிகாரிகளால் முடிவு எடுக்கும் சூழல் உள்ளது. நிதியை எப்படி பயன்படுத்த வேண்டும்  என்ற அதிகாரமே ஆதிக்க சாதிகளிடம் தான் உள்ளது.  நாட்டின் பெரும்பான்மையாக உள்ள  ஒபிசி பிரிவினர்  ஆட்சி அதிகாரத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை கோடி பேர் இருக்கின்றனர் என்பதை சாதிவாரி கணக்கெடுப்பு மூலமே உறுதி செய்ய முடியும்.  மகளிர் இடஒதுக்கீடு  சட்டம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு  நடைமுறைப்படுத்தப்படும் என்பதன் பின்னணியில் பெரிய திட்டம் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என ராகுல் காந்தி பேசினார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை; தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
TN School Leave: கனமழை எச்சரிக்கை; தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை; தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
TN School Leave: கனமழை எச்சரிக்கை; தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
Embed widget