மேலும் அறிய

இறக்கும் தருவாயில் கணவர்: கருத்தரிக்க கணவர் உயிரணு கேட்டு நீதிமன்றம் சென்ற மனைவி!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலையில் இருந்த கணவனின் உயிரணுவை சேகரித்து வைக்க வேண்டும் என்று அவரது மனைவி நீதிமன்றம் சென்றுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது ஒரளவு இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் குறைந்து வரும் சூழல் உருவாகியுள்ளது. எனினும் ஒரு சில இடங்களில் கொரோனா பாதித்த நோயாளிகள் மற்ற பிரச்னைகள் காரணமாக உயிரிழக்க நேரிடுகிறது. அந்தவகையில் ஒருவர் கொரோனா பாதித்து உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில் அவருடைய உயிரணுவை சேகரித்து வைக்க வேண்டும் என்று அவருடைய மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். யார் அவர்? என்ன நடந்தது?

குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த 29 வயது மதிக்க நபர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு உடலில் உள்ள பிற பாகங்களில் சற்று பாதிப்பு அதிகமாகியுள்ளது. இதனால் அவை வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக செயல் இழக்க தொடங்கியுள்ளன. இதன் காரணமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் கடந்த வாரம் அவருடைய நிலைமை மிகவும் மோசம் அடைந்துள்ளது. இதை தொடர்ந்து இன்னும் ஒரிரு நாட்களில் அவர் உயிரிழந்துவிடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


இறக்கும் தருவாயில் கணவர்: கருத்தரிக்க கணவர் உயிரணு கேட்டு நீதிமன்றம் சென்ற மனைவி!

இந்நிலையில் அவருடைய மனைவி தன் கணவரின் உயிரணுவை சேகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதை வைத்து அவர் செயற்கை முறையில் கருத்தரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது இருக்கும் இனப்பெருக்கம் உதவி தொழில்நுட்ப சட்டத்தின்படி ஒரு ஆணின் உயிரணுவை அவரின் அனுமதி இல்லாமல் எடுத்து சேகரிக்க முடியாது. அந்தப் பெண்ணி கணவர் தற்போது சுயநினைவில் இல்லை. ஆகவே இதை செய்ய மருத்துவர்கள் மறுத்துள்ளனர். தன்னுடைய கணவர் மறைந்துவிட்டாலும் அவருடைய உயிரணு மூலம் குழந்தை பெற்று அதை வளர்க்க அந்தப் பெண் தீர்மானித்துள்ளார். இதற்கு கணவரின் தாய் மற்றும் தந்தை உறுதுணையாக இருந்துள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இதை அவசர வழக்காகவும் விசாரிக்க கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக வழக்கை விசாரித்த நீதிபதி அந்தப் பெண்ணின் கணவரின் உயிரணுக்களை சேகரித்து வைக்க மருத்துவமனைக்கு உத்தரவிட்டது. எனினும் அதை வைத்து அப்பெண்ணிற்கு செயற்கை கருத்தரிப்பு செய்ய தற்போது அனுமதி வழங்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நாளை மீண்டும் வழக்கை விசாரிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 


இறக்கும் தருவாயில் கணவர்: கருத்தரிக்க கணவர் உயிரணு கேட்டு நீதிமன்றம் சென்ற மனைவி!

அந்தப் பெண்ணின் ஆசைக்கு ஏற்ப அவருடைய கணவரின் உயிரணுக்களை மருத்துவமனை நிர்வாகம் எடுத்து சேகரித்து வைத்துள்ளது. தன்னுடயை கணவர் இறந்து போகும் தருவாயில் பெண் ஒருவர் இப்படி செய்து இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் அவருக்கு செயற்கை கருத்தரிப்பு செய்ய அனுமதி வழங்கப்படுமா என்பது தெரிய வரும். 

மேலும் படிக்க: Census 2021 : 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி தகவல்கள் சேகரிக்கப்படாது - மத்திய அரச

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget