மேலும் அறிய

"கடைசி முறையா கூப்பிடுறேன்" பேச்சுவார்த்தைக்கு அழைத்த மம்தா.. முடிவுக்கு வருமா மருத்துவர்கள் போராட்டம்

போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை கடைசியாக முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது.

கொல்கத்தா ஆர். ஜி. கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு,  கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதை கண்டித்து போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை ஐந்தாவது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

விடாபிடியாக இருக்கும் மருத்துவர்கள்:

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாநில சுகாதாரத்துறை அலுவலகம் வெளியே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மருத்துவர்கள் தரப்பும் அரசு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் உள்பட மருத்துவர்களின் பல கோரிக்கைகள் ஏற்கப்படாத காரணத்தால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை பணியில் சேர போவதில்லை என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசியாக முறையாக மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவுப்படி, மருத்துவர்கள் மீண்டும் பணியைத் தொடர வேண்டும் என்று தலைமைச் செயலர் மனோஜ் பந்த் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இறங்கி வந்த மம்தா:

அதில், "முதலமைச்சருக்கும் உங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பிற்காக நாங்கள் உங்களை அணுகுவது இது ஐந்தாவது மற்றும் கடைசி முறையாகும். நேற்று முன்தினத்தில் இருந்து மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைக்கு இணங்க, மீண்டும் ஒருமுறை உங்களை முதலமைச்சர் காளிகாட் இல்லத்தில் திறந்த மனதுடன் கலந்துரையாட அழைக்கிறோம்.

நல்ல உணர்வு மேலோங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டபடி மற்றும் முந்தைய நாள் ஊடகங்களுக்கு நீங்கள் அளித்த அறிக்கையின்படி - இந்த விவகாரம் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால், சந்திப்பின் நேரடி ஒளிபரப்பு அல்லது வீடியோ எதுவும் எடுக்கக் கூடாது. மாறாக, கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு, அதாவது செப்டம்பர் 16, 2024 அன்று, முதலமைச்சர் காளிகாட் இல்லத்தில் நடைபெற உள்ளது. கடந்த கலந்துரையாடலுக்கு வந்த அதே தூதுக்குழு இன்று மாலை 4:45 மணிக்கு நிகழ்விடத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உங்கள் நேர்மறையான பதிலையும், பயனுள்ள விவாதத்தையும் எதிர்பார்க்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget