மேலும் அறிய

Mamata Banerjee | தேயுச்சா பசமி சுரங்கத்தை எதிர்க்கும் பழங்குடிகள்.. இழப்பீட்டை அதிகரித்து அறிவித்த மம்தா பானர்ஜி!

மேற்கு வங்கத்தில் உள்ள தேயுச்சா பசமி நிலக்கரி சுரங்கம் தோண்டுவதைப் பழங்குடிகள் எதிர்த்த நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடிகளுக்கான நிதியுதவியை அதிகரித்து அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் பிர்பம் மாவட்டத்தில் உள்ள தேயுச்சா பசமி பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடிகள் போராட்டம் நடத்திய நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடிகளுக்கான நிதியுதவியை அதிகரித்து அறிவித்துள்ளார். 

மேற்கு வங்கத்தின் தேயுச்சா பசமி பகுதியில் நாட்டிலேயே மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தை அமைக்கவுள்ளதாகவும், அது தடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடிகளும், பிற மக்களும் தவறாக வழிநடத்தப்படுவதாகவும், தேயூச்சா பசமி எதிர்காலத்தில் மேற்கு வங்கத்தின் அடையாளமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Mamata Banerjee | தேயுச்சா பசமி சுரங்கத்தை எதிர்க்கும் பழங்குடிகள்.. இழப்பீட்டை அதிகரித்து அறிவித்த மம்தா பானர்ஜி!

கடந்த பிப்ரவரி 21 அன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, `நான் ஏழைகளை அழிக்க எதனையும் செய்தது இல்லை. தேயூச்சா பசமி, முகமது பஜார் பகுதி மக்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், நான் அவர்களுள் ஒருவருக்கும் அநீதி இழைக்க மாட்டேன். தங்கள் நிலங்களை வழங்க முன்வரும் மக்களுக்குப் பணி வழங்கப்படும்; மேலும், நிலத்தின் மதிப்பு இரட்டிப்பாக அளிக்கப்படும். நான் எதையும் வலுக்கட்டாயமாகத் திணிக்க மாட்டேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சில குவாரி உரிமையாளர்கள் தங்கள் தனிநலனுக்காக இந்த விவகாரத்தில் தலையிடுகிறார்கள். தங்கள் சட்டவிரோத குவாரிகள் மூடப்பட்டதால் அவர்கள் குழப்ப நிலையில் இருக்கிறார்கள். நாம் நிலத்தைப் பெற்றுக் கொண்டு நிலம் வழங்குவதோடு, வீடும் கட்டி வழங்குகிறோம்’ எனக் கூறியுள்ளார். 

மேற்கு வங்க மாநில அரசு தேயூச்சா பசமி திட்டத்திற்காக சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்திற்காக நிலம் வழங்க முன்வருபவர்களுக்கு அதன் சந்தை மதிப்பில் இருந்து இரண்டு மடங்காக பணம் வழங்கப்படும் எனவும், 100 சதவிகித இழப்பீடு வழங்கப்படும் எனவும் மேற்கு வங்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் இன்று மேற்கு வங்க அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. 

மேலும், இந்தத் திட்டத்திற்காக வீடுகளை ஒதுக்க முன்வருபவர்களுக்கு அரசு சார்பில் புதிதாக 700 சதுர அடி வீடுகள் கட்டித் தரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு சார்பில் கட்டித் தரப்படும் வீட்டின் அளவு 600 சதுர அடிகளாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது இது உயர்த்தப்பட்டுள்ளது; மேலும், வீடு பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக பணம் பெற்றுக் கொள்ள விரும்புபவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில், அது தற்போது அதிகரிக்கப்பட்டு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

Mamata Banerjee | தேயுச்சா பசமி சுரங்கத்தை எதிர்க்கும் பழங்குடிகள்.. இழப்பீட்டை அதிகரித்து அறிவித்த மம்தா பானர்ஜி!

வீடுகளையோ, நிலத்தையோ அளிக்க முன்வருவபர்களின் குடும்பத்திற்கு காவல்துறையில் காவலர் பணி வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது தகுதியுள்ளவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப காவல்துறையிலோ, பிற துறைகளிலோ வேலை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்காக மாநில அமைச்சரவை சுமார் 5100 காலியிடங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

தேயூச்சா பசமி நிலக்கரி திட்டத்திற்கு மொத்தம் 3400 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படவுள்ளது. இதில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் மாநில அரசின் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget