மேலும் அறிய

Mamata Banerjee | தேயுச்சா பசமி சுரங்கத்தை எதிர்க்கும் பழங்குடிகள்.. இழப்பீட்டை அதிகரித்து அறிவித்த மம்தா பானர்ஜி!

மேற்கு வங்கத்தில் உள்ள தேயுச்சா பசமி நிலக்கரி சுரங்கம் தோண்டுவதைப் பழங்குடிகள் எதிர்த்த நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடிகளுக்கான நிதியுதவியை அதிகரித்து அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் பிர்பம் மாவட்டத்தில் உள்ள தேயுச்சா பசமி பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடிகள் போராட்டம் நடத்திய நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடிகளுக்கான நிதியுதவியை அதிகரித்து அறிவித்துள்ளார். 

மேற்கு வங்கத்தின் தேயுச்சா பசமி பகுதியில் நாட்டிலேயே மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தை அமைக்கவுள்ளதாகவும், அது தடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடிகளும், பிற மக்களும் தவறாக வழிநடத்தப்படுவதாகவும், தேயூச்சா பசமி எதிர்காலத்தில் மேற்கு வங்கத்தின் அடையாளமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Mamata Banerjee | தேயுச்சா பசமி சுரங்கத்தை எதிர்க்கும் பழங்குடிகள்.. இழப்பீட்டை அதிகரித்து அறிவித்த மம்தா பானர்ஜி!

கடந்த பிப்ரவரி 21 அன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, `நான் ஏழைகளை அழிக்க எதனையும் செய்தது இல்லை. தேயூச்சா பசமி, முகமது பஜார் பகுதி மக்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், நான் அவர்களுள் ஒருவருக்கும் அநீதி இழைக்க மாட்டேன். தங்கள் நிலங்களை வழங்க முன்வரும் மக்களுக்குப் பணி வழங்கப்படும்; மேலும், நிலத்தின் மதிப்பு இரட்டிப்பாக அளிக்கப்படும். நான் எதையும் வலுக்கட்டாயமாகத் திணிக்க மாட்டேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சில குவாரி உரிமையாளர்கள் தங்கள் தனிநலனுக்காக இந்த விவகாரத்தில் தலையிடுகிறார்கள். தங்கள் சட்டவிரோத குவாரிகள் மூடப்பட்டதால் அவர்கள் குழப்ப நிலையில் இருக்கிறார்கள். நாம் நிலத்தைப் பெற்றுக் கொண்டு நிலம் வழங்குவதோடு, வீடும் கட்டி வழங்குகிறோம்’ எனக் கூறியுள்ளார். 

மேற்கு வங்க மாநில அரசு தேயூச்சா பசமி திட்டத்திற்காக சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்திற்காக நிலம் வழங்க முன்வருபவர்களுக்கு அதன் சந்தை மதிப்பில் இருந்து இரண்டு மடங்காக பணம் வழங்கப்படும் எனவும், 100 சதவிகித இழப்பீடு வழங்கப்படும் எனவும் மேற்கு வங்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் இன்று மேற்கு வங்க அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. 

மேலும், இந்தத் திட்டத்திற்காக வீடுகளை ஒதுக்க முன்வருபவர்களுக்கு அரசு சார்பில் புதிதாக 700 சதுர அடி வீடுகள் கட்டித் தரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு சார்பில் கட்டித் தரப்படும் வீட்டின் அளவு 600 சதுர அடிகளாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது இது உயர்த்தப்பட்டுள்ளது; மேலும், வீடு பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக பணம் பெற்றுக் கொள்ள விரும்புபவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில், அது தற்போது அதிகரிக்கப்பட்டு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

Mamata Banerjee | தேயுச்சா பசமி சுரங்கத்தை எதிர்க்கும் பழங்குடிகள்.. இழப்பீட்டை அதிகரித்து அறிவித்த மம்தா பானர்ஜி!

வீடுகளையோ, நிலத்தையோ அளிக்க முன்வருவபர்களின் குடும்பத்திற்கு காவல்துறையில் காவலர் பணி வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது தகுதியுள்ளவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப காவல்துறையிலோ, பிற துறைகளிலோ வேலை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்காக மாநில அமைச்சரவை சுமார் 5100 காலியிடங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

தேயூச்சா பசமி நிலக்கரி திட்டத்திற்கு மொத்தம் 3400 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படவுள்ளது. இதில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் மாநில அரசின் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Embed widget