மேலும் அறிய

ஆளுநருக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதா? கொதிக்கும் மக்கள்!

கர்நாடக மாநிலத்தில் உள்ளது லிங்கனமாக்கி அணை. இந்த அணையில் இருந்து கடந்த வியாழக்கிழமை முன் அறிவிப்பு ஏதுமின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ளது லிங்கனமாக்கி அணை. இந்த அணையில் இருந்து கடந்த வியாழக்கிழமை முன் அறிவிப்பு ஏதுமின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆளுநர் தாவர்சந்த் கெலாட் வருகையை ஒட்டி முன் அறிவிப்பின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் அணையை ஒட்டியிருந்த கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். கார்கல், மாரலுகோரே, அம்புகலலே ஆகிய கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. 

லிங்கனமாக்கி அணை நீர் திறக்கப்பட்டால் அது ஜாக் நீர்வீழ்ச்சியை வந்தடையும். அன்றைய தினம் ஆளுநர் ஜாக் நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு வந்ததாலேயே அவசர அவசரமாக லிங்கனமாக்கி அணை திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
லிங்கனமாக்கி அணையின் மொத்த கொள்ளளவு 1819 அடி. ஆனால், அணையின் நீர்மட்டத்தை எட்ட 7 அடி குறைவாகவே தண்ணீர் இருந்தது. இந்நிலையில் ஆளுநர் வருகைக்காக அணையைத் திறந்தது மக்களை கோபமடையச் செய்துள்ளது. ஜாக் நீர்வீழ்ச்சியில் பருவமழை முடிந்துவிட்டால் தண்ணீர் பெரியளவில் இருக்காதாம். அப்படியிருக்க அணையில் தேக்கியிருந்த தண்ணீர் ஆளுநர் பார்வையிடுவதற்காக திறந்துவிட்டது தவறு என மக்கள் கூறுகின்றனர்.

ஆனால் கர்நாடகா மின் கார்ப்பரேஷன் லிமிடட் ஆன கேபிசிஎல் அதிகாரிகளோ, லிங்கனமாக்கி அணையில் தேக்கப்படும் நீர் மக்களின் குடிநீர் தேவைக்காகவோ பாசனத்துக்காகவோ திறக்கப்படுவதில்லை. அதில் தேக்கப்படும் தண்ணீர் முழுக்க முழுக்க மின்சாரம் தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது என்றனர். தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஆளுநர் மட்டுமல்ல அங்கு வந்த நிறைய சுற்றுலா பயணிகளும் நீர்வீழ்ச்சியின் அழகைக் கண்டு ரசித்தனர் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆளுநர் ஜாக் அருவிக்கு லிங்கனமாக்கி அணையில் இருந்து தண்ணீர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் இதில் ஆளுநரை தேவையில்லாமல் சர்ச்சைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆளுநருக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதா? கொதிக்கும் மக்கள்!

துணை ஆணையர் கே.பி.சிவக்குமார் கூறும்போது, அணையைப் பற்றி விவரம் தெரியாத அணையோர கிராம மக்கள் தான் தேவையற்ற சர்ச்சையைக் கிளப்புகின்றனர். அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதற்கு வழக்கமான பராமரிப்புப் பணிகளே காரணம். இதனால் ஒரே ஒரு நபர் கூட பாதிக்கப்படவில்லை. மேலும் மின் உற்பத்தியும் தடைபடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கேபிசிஎல் அதிகாரிகள் அளித்த விளக்கத்தில், அணையின் முகத்துவாரத்தில் குப்பைகளும் சில மரக்கட்டைகளும் அடைத்துக் கொண்டிருந்தன. அதனாலேயே அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த நேரத்தில் ஆளுநர் அங்கு வந்துவிட்டார். அவ்வளவே என்று கூறியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget