மேலும் அறிய

Watch video : ஆக்ரோஷமாக ஓடிவந்த யானை.. நூலிழையில் தப்பிய மக்கள்.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள்..

செருப்புழா மற்றும் வள்ளிகெட்டு பகுதிகள் கருளை ஊராட்சியில் நிலம்பூர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

மலை கிராமங்களில் , காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் என்பது அதிகமாக இருக்கும். யானை மனிதர்களை தங்கள் இனத்தின் அச்சுறுத்தலாக நினைத்து தாக்குவதும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில் யானை ஒன்று மக்கள் நடமாடும் பகுதிக்குள் வந்து ஆக்ரோஷமாக பைக்கை தட்டிவிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள  செருபுழா என்னும் கிராமத்தில்  வீடுகள் நிறைந்த பகுதிக்குள் யானை ஒன்று வழி மறந்து வந்துவிட்டது. இதனை அறியாத அப்பகுதி மக்கள் இயல்பாக தங்களின் வேலையை பார்த்துக்கொண்டிருக்க , மிரண்டு ஓடு வந்த யானையை பார்த்ததும் அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் விறுட்டென வீட்டிற்குள் பாய்ந்துவிட்டனர். மனிதர்களை கண்டதும் ஆக்ரோஷமாக வந்த யானை , அங்கு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை தனது தந்தத்தால் மோதி கீழே தள்ளிவிட்டு , அதே வேகத்தில் கடந்து சென்றது. இரவு 8.30 மணியளவில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானது. இதனை சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடவே இணையத்தில் வைரலாகி வருகிறது.

பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு , அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலரின் உதவியுடன் வழி தவறி வந்த யானையை காட்டிற்குள் அனுப்பி வைத்திருக்கின்றனர். தற்போது யானை வள்ளிக்கெட்டு பகுதியை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. செருப்புழா மற்றும் வள்ளிகெட்டு பகுதிகள் கருளை ஊராட்சியில் நிலம்பூர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. யானைகளின் தாக்குதல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும், உரிய தீர்வு கிடைக்காமல், அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

முன்னதாக  தான் உண்டு தன் வேலையுண்டு என்று சென்றுகொண்டிருந்த சஜி என்பவரை யானை துரத்திய சம்பவம் கேரள மாநிலம் இடுக்கியில் நடந்துள்ளது. யானையை அந்த நபர் தொந்தரவு செய்யாத போதிலும் , யானை அந்த நபரை தங்களுக்க்  அச்சுறுத்தலாக எண்ணி   திடீரென்று காட்டு யானைக் கூட்டம் அவரை நோக்கி ஓடி வந்துள்ளதைக் கண்ட ​​​​சஜி என்பவர் வேறு வழியின்றி மரத்தில் ஏறியுள்ளார். ஏனெனில் இடுக்கியின் மலைப்பகுதிகளில் ஒளிவதற்கு வேறு இடம் கிடையாது எக்காளம் முழங்க யானைகள் சூழ்ந்ததால் மூச்சை அடக்கிக்கொண்டு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மரத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அதன்  பிறகு யானைகள் நகரவே அவர் அங்கிருந்து தப்பியிருக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
Embed widget