மேலும் அறிய

உ.பியில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை; பாஜகவிற்கு எதிராக வலுக்கும் கண்டனம்!

போராட்டத்திற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும், வன்முறையின் போது தனது மகன் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துவருகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டத்தின் போது ஏற்பட்ட சம்பவம் அநீதிக்கு எதிரானது என ராகுல், மம்தா உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் என்ற இடத்தில் துணை முதல்வர் மற்றும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பங்கேற்கும் விழா ஒன்று நடைபெறவிருந்தது. எனவே அவ்விழாவிற்கு வருகைத் தந்த பாஜக தலைவர்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் மற்றும் பாதுகாப்பு வாகனக் கார்களை வழிமறித்து விவசாயிகள் போராட்டம் நடத்திய சமயத்தில், தீடிரென மத்திய இணைய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் கார் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுவருகின்றனர்.

  • உ.பியில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை; பாஜகவிற்கு எதிராக வலுக்கும் கண்டனம்!

இந்நிலையில் தான், ஆத்திரமடைந்த விவசாயிகள் விபத்துக்குக் காரணமாக இருந்தக் காரை எரித்துப் போராட்டம் நடத்தினர். இவர்களின் போராட்டத்தைக்கட்டுக்கொண்டுவிதமாக  விதமாக போலீசார் தடியடி  நடத்திக்கலைக்க முயன்றுள்ளனர். அப்போது மிகப்பெரிய வன்முறை சம்பவம் அப்பகுதியில் அரங்கேறியது. மேலும் மாநிலத்தின் நிலைமையை உடனடியாக  கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் டி.ஜி.பி பிரசாந்த் குமார் சம்பவ இடத்திற்கு வந்தார். இதனையடுத்து பல மணி நேரம் போராட்டத்திற்கு ஓரளவிற்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருந்தப்போதும் விவசாயிகளின் மீது தாக்குதல் நடத்திய பாஜக அரசிற்கு எதிராக இன்று நாடு முழுவதும் விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் இந்தப்போராட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சித்தலைவர்கள் கண்டனங்களைத்தெரிவித்துவருகின்றனர் குறிப்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், விவசாயிகளின் மீது மத்திய அமைச்சரும், பாஜகவினரும் வேண்டுமென்றே திட்டமிட்டமிட்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். எனவே இனியும் அமைதியாக இருந்தால் நாம் அனைவரும் செத்துவிட்டதாக அர்த்தம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 இதேப்போன்று லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தைத்தெரிவித்துள்ளதோடு, விவசாயிகளுக்கு திரிணாமுல் காங்கிரசின் ஆதரவு எப்போதும் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.  மேலும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் விவாசாயிகளின் போராட்டத்திற்கு எதிராகக் கண்டனங்களைத்தெரிவித்துவருகின்றனர்.  

  • உ.பியில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை; பாஜகவிற்கு எதிராக வலுக்கும் கண்டனம்!

ஆனாலும் இந்தப்போராட்டத்திற்கு எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும், வன்முறையின் போது தனது  மகன் அங்கு இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதோடு இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையால் பா.ஜ.க வைச்சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த சூழலில் தான்  இன்று உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கசென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவரை கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்காமல், கிராம எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

தலைப்பு செய்திகள்

HIV Cases: அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?
லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?
Longest Serving PM Modi: ‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
Senthil Balaji : ’அச்சடிச்ச மாதிரி ஒரே விண்ணப்பம்’ 400 கோடி ஊழலை செந்தில் பாலாஜி செய்தது எப்படி?
’அச்சடிச்ச மாதிரி ஒரே விண்ணப்பம்’ 400 கோடி ஊழலை செந்தில் பாலாஜி செய்தது எப்படி?
Marriage Registration : திருமணப் பதிவு.! பெற்றோர் நேரில் வர உத்தரவு போடுங்க- வன்னியர் சங்கம் அதிரடி கோரிக்கை
திருமணப் பதிவு.! பெற்றோர் நேரில் வர உத்தரவு போடுங்க- வன்னியர் சங்கம் அதிரடி கோரிக்கை
பவானியில் இருந்து துபாய்க்கு அரசு பேருந்தா? டிக்கெட் விலை 10 ஆயிரமா? தவெக அரசு விளக்கம்!
பவானியில் இருந்து துபாய்க்கு அரசு பேருந்தா? டிக்கெட் விலை 10 ஆயிரமா? தவெக அரசு விளக்கம்!
Mazagon Dock: ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
Embed widget