![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Youth Turned As Girl: நண்பனை திருமணம் செய்துகொள்ள பெண்ணாக மாறிய இளைஞர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!
நண்பனை திருமணம் செய்து கொள்வதற்காக பெண்ணாக மாறிய இளைஞர், ஏமாற்றப்பட்ட சம்பவம் விஜயவாடா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Youth Turned As Girl: நண்பனை திருமணம் செய்துகொள்ள பெண்ணாக மாறிய இளைஞர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி! vijayawada youth who turned his friend into a girl by expressing his desire for marriage Youth Turned As Girl: நண்பனை திருமணம் செய்துகொள்ள பெண்ணாக மாறிய இளைஞர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/09/87a3e7b92ffd4cef42cd98996ba1b0f31691591297434290_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருமண்ம் செய்து கொள்வதாக கூறி நண்பனை பெண்ணாக மாற்றி மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நண்பர்களிடையே காதல்:
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் வசித்து வந்த நாகேஸ்வரராவ் என்பவர் தான் தற்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ண லங்கா பகுதியை சேர்ந்த இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பவன் என்ற மற்றொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். ஒரே மாதிரி உடை அணிதல், ஒன்றாக சாப்பிடுவது, ஒன்றாக வெளியே செல்வது என இவர்களது நெருக்கம் மேலும் மேலும் அதிகரித்துள்ளது. இந்த அதிகப்படியான நெருக்கம் இருவரிடையே தன்பாலின ஈர்ப்பை ஏற்படுத்தியது.
திருமண முடிவு:
நாகேஸ்வர ராவும் அவரது நண்பர் பவனும் காதலித்து, அடிக்கடி தனிமையில் சந்தித்து தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டனர். ஒருவரை விட்டு மற்றொருவர் வாழ முடியாது என்ற அளவிற்கு இவர்கள் இடையேயான நெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால், லிவிங் டு கெதர் முறையில் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளனர். பவன் தன்னிடம் இருந்த நகை, பணம் ஆகியவற்றையும் நாகேஸ்வர் ராவிடம் கொடுத்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் கடுமையாக விமர்சித்துள்ளனர். தொடர்ந்து, இருவரும் வெவ்வேறு பெண்களை திருமணம் செய்து கொண்டால் தனித்தனியாக பிரிந்து விடுவோம் என கருதியுள்ளனர். இதனால் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக இருக்கலாம் என நாகேஸ்வரராவ் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்படி, நம்மில் யாராவது ஒருவர் பெண்ணாக மாற வேண்டும் என்றபோது பவன் பெண்ணாக மாற ஒப்புக்கொண்டுள்ளார்.
பெண்ணாக மாறிய பவன்:
இதனை தொடர்ந்து பவன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டார். பின்னர் நாகேஸ்வரராவிடம் வந்து நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் கூறியுள்ளார். ஆனால், நீ அழகாக இல்லை அதனால் உன்னை திருமணம் செய்ய முடியாது என நாகேஸ்வர ராவ் மறுப்பு தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பவன், பெண்ணாக மாறினால் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கிருஷ்ண லங்கா காவல் நிலையத்தில் புகார் செய்தார். தன்னிடம் இருந்த நகை மற்று பணத்தை பறித்துக் கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் விசாரணை:
அதனடிப்படையில், நாகேஸ்வர ராவ் மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமி மீது மோசடி, துரோகம் செய்வது மற்றும் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, நாகேஸ்வர் ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)