மேலும் அறிய

உங்க கார் பாதுகாப்பானதா? காருக்கு வருகிறது ஸ்டார் ரேட்டிங்! செய்ய வேண்டியது என்ன?

சோதனையின் அடிப்படையில் வாகனங்களின் பாதுகாப்பை மதிப்பீடு செய்யும் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அரசு முதல் அதிகாரப்பூர்வ நடவடிக்கையை எடுத்துள்ளது.

சோதனையின் அடிப்படையில் வாகனங்களின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு அதனை மதிப்பிடும் முறைக்கான வரைவு அறிவிப்பானைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு வெளியாகி நான்கு மாதங்களுக்கு பிறகு, சோதனையின் அடிப்படையில் வாகனங்களின் பாதுகாப்பை மதிப்பீடு செய்யும் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அரசு முதல் அதிகாரப்பூர்வ நடவடிக்கையை எடுத்துள்ளது.

வரும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல், பாரத் புதிய கார் மதிப்பிடும் முறை அமலுக்கு வருகிறது. கார் உற்பத்தியாளர்கள் மற்றும் காரை இறக்குமதி செய்பவர்கள் தங்களின் கார்களை சோதனைக்கு உட்படுத்தி ஸ்டார் ரெட்டிங் பெற்று கொள்ளலாம்.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், "சோதனையின் அடிப்படையில் வாகனங்களின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு அதனை மதிப்பிடும் முறைக்கான வரைவு அறிவிப்பானைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.

 

ஒப்புதல் வழங்கப்பட்ட பயணிகள் வாகனங்களை சோதனையிட்டு அதனை மதிப்பிடும் அதிகாரம் பாரத் புதிய கார் மதிப்பிடும் திட்டத்திற்கு (என்சிஏபி) வழங்கப்பட்டுள்ளது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்சிஏபி மூலம் அனைத்து வாகனங்களின் நட்சத்திர மதிப்பீட்டை சரிபார்க்க பொதுமக்களுக்காக ஒரு போர்டல் உருவாக்கப்படும். மதிப்பீட்டு செயல்முறை முடிந்த பிறகு, சோதனை நிறுவனம் பாரத் என்சிஏபிக்கு அறிக்கையை அனுப்பும். 

 

மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்ற பிறகு, புதிய கார் நட்சத்திர மதிப்பீட்டை பொது மக்களுக்காக என்சிஏபி போர்ட்டலில் பதிவேற்றும். இருப்பினும், என்சிஏபியால் கண்காணிக்கப்படும் ஒரு தன்னார்வ திட்டம் என்றே இது குறிப்பிடப்பட்டுள்ளது. மதிப்பீட்டுக்காக உற்பத்தி செய்யப்படும் கார்களின் செலவை உற்பத்தியாளரோ அல்லது இறக்குமதி செய்பவரே ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பின் அடிப்படையில் 1 லிருந்து 5 ஸ்டார்கள் வரை கார்களுக்கு வழங்கப்படும். உலகளவில் இருக்கும் கார் மதிப்பீட்டு திட்டத்தை ஒருங்கிணைக்கும் அமைப்பாகவே என்சிஏபி விளங்குகிறது. இது தனியார் அமைப்பு என்பதால், இதனை பாரத் என்சிஏபி என்றழைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
International Yoga Day 2025: உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
International Yoga Day 2025: உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
India Vs Pakistan: “நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
“நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்
"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை" உறுதியாக சொன்ன பிரதமர் மோடி
Embed widget